ஜெயம் ரவியை நம்புனது தப்பா போச்சு.. பாதி கிணறு தாண்டி மீதியை தாண்ட முடியாமல் தவிக்கும் இயக்குனர்

ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக வெளியான பூமி திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனால் அடுத்தடுத்து தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் ஜெயம் ரவி.

அந்த வகையில் தற்போது மணிரத்னம் இயக்கி கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இதே கெட்டப்பில் தான் பூமி படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அதே பொன்னியின் செல்வன் கெட்டப்பில் ஜீவாவுக்கு என்றென்றும் புன்னகை என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த அகமது இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வந்துள்ளார்.

70 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது அந்த படத்தை அப்படியே விட்டுவிட்டு வேறு ஒரு படத்தை எடுக்கலாம் என தயாரிப்பு தரப்பு அந்த இயக்குனரை நச்சரித்துள்ளது. அதற்கு காரணம் அந்த படம் முழுக்க முழுக்க வெளிநாடுகளில் உருவாக்க வேண்டி இருந்ததாம்.

தற்போது வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைப்பது குதிரை கொம்பாக இருக்கும் நிலையில் இப்போதைக்கு அந்த படத்தை உருவாக்க முடியாது என கைவிரித்து விட்டதாம் படக்குழு.

தற்போது பல படங்கள் வெளிநாடுகளில் படப்பிடிப்பை நடத்த கிளம்பிச் சென்றாலும் எதற்கு தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்க வேண்டும் என தயாரிப்பு தரப்பு அதே கூட்டணியை வைத்து ஒரு படத்தை எடுக்கலாம் என முடிவு செய்து விட்டார்கள்.

அந்தப் படத்தையும் முடிக்க முடியாமல் புதிய படத்திற்கான கதையையும் சரியாக எழுத முடியாமல் தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கிறார் இயக்குனர் அகமது. பொன்னியின் செல்வன் படத்தை முடித்தால்தான் ஜெயம் ரவி நிம்மதியாக வேலை பார்க்க முடியும் என்கிற அளவுக்கு அந்த படத்தின் படப்பிடிப்புகள் வளவளவென்று இழுத்துக் கொண்டே போகிறதாம்.

jayamravi-ahamad-cinemapettai
jayamravi-ahamad-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்