சிம்பு இல்லைனா எனக்கு வாழ்க்கையே இல்லை.. பொங்கிய பிரபலம்

சமீபகாலமாக வைரல் பிரபலமாக இருக்கும் ஒருவர் சிம்பு இல்லை என்றால் எனக்கு வாழ்க்கையே இல்லை என்று கூறியது சிம்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இதுதான் இன்றைய கோலிவுட் ஹாட் டாபிக்.

வாரிசு நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வருபவர் சிம்பு. கடந்த சில வருடங்களாக இவருக்கு நேரம் சரியில்லாத காரணத்தினால் சினிமாவில் இருந்து ஒதுங்கி விடப்பட்டார். ஆனால் தற்போது அதே சினிமாக்காரர்கள் அவரை தேடி தேடி பட வாய்ப்பு கொடுக்குமாறு கெஞ்சி வருகின்றனர்.

அதற்கு காரணம் அவரது உடல் எடையை குறைத்து மீண்டும் மன்மதன், வல்லவன் படங்களில் பார்த்தது போலவே மாறியுள்ளதால் தற்போது 10 கோடி சம்பளம் கொடுத்து அவரை படத்தில் நடிக்க வைக்க பலபேர் தவம் கிடக்கின்றனர்.

சிம்பு தன்னுடைய சினிமா கேரியரில் பலபேருக்கு சினிமாவில் அவர்களுக்கு ஒரு கேரியரை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். அதில் மிக முக்கியமானவர் சந்தானம். லொள்ளு சபாவில் நடித்துக்கொண்டிருந்த சந்தானத்திற்கு மன்மதன், வல்லவன் போன்ற படங்களில் வாய்ப்பு கொடுத்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத காமெடி நாயகனாக மாற்றினார்.

simbu-sandy-cinemapettai
simbu-sandy-cinemapettai

அதேபோல்தான் இன்று டான்ஸ் மாஸ்டராக தமிழ் சினிமாவில் முன்னணி இடத்தில் இருக்கும் சாண்டி என்பவருக்கு தன்னுடைய வாலு படத்தின் மூலம் வாய்ப்பு கொடுத்து அவரது திறமையை உலகிற்கு நிரூபித்துள்ளார்.

சமீபத்தில் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் சிம்பு பாடிய தப்பு பண்ணிட்டேன் பாடல் வெளியாகி வைரல் ஆகியுள்ளது. இந்த பாடலுக்கு நடனம் அமைத்தவர் சாண்டி. அந்த பாடல் குறித்த பேட்டியில் தான், சிம்பு இல்லை என்றால் எனக்கு வாழ்க்கையே இல்லை என குறிப்பிட்டிருந்தார். சாண்டி மானாட மயிலாட நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்