கடைசியா அஞ்சலி படத்தில் நடிச்சது.. பொன்னியின் செல்வன் மூலம் மீண்டும் மணிரத்னத்துடன் இணைந்த நடிகர்

தமிழ் சினிமாவின் காலகட்ட இயக்குனர் என மணிரத்தினத்தை சொல்லலாம். எந்தெந்த காலகட்டங்களில் எந்த மாதிரி படங்களை கொடுத்து, எப்படி சினிமாவில் தன்னுடைய இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பவர்.

இப்போதும் மணிரத்னம் படம் எடுக்கிறார் என்றால் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு உள்ள எதிர்பார்ப்பு போல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருக்கும். சமீபத்தில் செக்கச் சிவந்த வானம் என்ற கேங்ஸ்டர் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார் மணிரத்னம்.

அதன் பிறகு கிட்டத்தட்ட 400 கோடி பட்ஜெட்டில் பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி வருகிறார். பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகமாக வெளியாக உள்ளது. அதன் முதல் பாகத்திற்கு PS:1 என பெயர் வைத்துள்ளனர்.

சமீபத்தில் PS:1 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட வெளியாகி வைரல் ஆனது. மேலும் இந்த படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யாராய் போன்ற பல முன்னணி நட்சத்திர நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர்.

அதில் முப்பது வருடத்திற்கு முன் மணிரத்தினம் இயக்கிய அஞ்சலி படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த மலையாள நடிகர் பாபு ஆண்டனி என்பவர் மீண்டும் மணிரத்னம் படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

மணிரத்னம் தற்போது இயக்கிவரும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் 2022ஆம் ஆண்டு வெளியாகும் என போஸ்டரில் அறிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு இரண்டாம் பாகம் வெளிவருமாம்.

babu-antony-actor
babu-antony-actor
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்