Tamil Cinema News | சினிமா செய்திகள்
எதிர்பார்ப்பை எகிற வைக்கும் மாநாடு.. சிம்புவுக்கு வில்லனான பிரபல நடிகர்
ஒருவழியாக மாநாடு படத்தில் சிம்பு நடிக்க ஒப்புக்கொண்ட பிறகு படத்தின் வேலைகள் படபடவென ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக படத்தின் இசை பணிகள் நடைபெற்று வருவதை சமீபத்தில் யுவன் சங்கர் ராஜா மற்றும் வெங்கட் பிரபு ஆகியோர் இணைந்து புகைப்படம் வெளியிட்டு பதிவு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து படத்தில் சிம்புவுக்கு வில்லனாக பல நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. இதில் முக்கியமாக பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப் என்பவரை தேர்வு செய்து படக்குழு அணுகியது. ஆனால் அவருக்கு தேதிகள் ஒத்து வராத காரணத்தினால் மாநாடு படத்தில் நடிக்கவில்லை.
இதனால் மீண்டும் வில்லன் மேடையில் இறங்கிய படக்குழு சமீபத்தில் வில்லன் வேடங்களில் கலக்கி வரும் அரவிந்த்சாமியிடம் தஞ்சமடைந்துள்ளது. படத்தின் கதையை கேட்ட பிறகு அரவிந்த்சாமி தேதிகள் ஒதுக்கி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
தனி ஒருவன் மற்றும் போகன் ஆகிய படங்களில் வில்லனாக நடித்து ஒட்டு மொத்த ரசிகர்களையும் மிரள செய்தார். தற்போது தமிழ் சினிமாவே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் மாநாடு படத்தில் சிம்புவுக்கு வில்லனாக நடிக்க ஒப்புக் கொண்டது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது.
பிப்ரவரி முதல் வாரத்தில் மாநாடு படத்தின் படப்பிடிப்பு துவங்க இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சமீபத்தில் செய்தி வெளியிட்டார். மேலும் படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் டெக்னீசியன்கள் விவரங்கள் பொங்கலன்று வெளியாகும் எனவும் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
