Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஏமாற்றிய சிவகார்த்திகேயன்.. மனம் நொந்து வேறு ஒரு நடிகருடன் கைகோர்த்த பொன்ராம்!
தமிழ் சினிமாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன். படத்துக்கு படம் அவரது வளர்ச்சி அதிகமாகி கொண்டே வருகிறது. ரசிகர்களும் அதற்கேற்றாற்போல் அதிகமாகி விட்டனர்.
சிவகார்த்திகேயன் எந்த ஒரு விஷயம் செய்தாலும் அதை அனைவருக்கும் தெரியும் வகையில் ட்ரண்ட் செய்து கொண்டாடுகின்றனர் அவரது ரசிகர்கள்.
அப்படிப்பட்ட சிவகார்த்திகேயன் இந்த அளவுக்கு வருவதற்கு மிக முக்கியமான காரணங்கள் வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினி முருகன் போன்ற படங்கள்தான்.
இந்த இரண்டு படங்களையும் இயக்கியவர் பொன்ராம். ஆனால் இதே பொன்ராம் இயக்கத்தில் வெளிவந்த சீமராஜா என்ற படம் சிவகார்த்திகேயன் சினிமா வாழ்க்கைக்கே ஆப்பு வைக்கும் வகையில் தோல்வியை சந்தித்தது.
இதனால் மீண்டும் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்க நினைத்த பொன்ராமை பிறகு இருவரும் சேர்ந்து படம் செய்வோம் என ஒதுக்கி வைத்து விட்டாராம். அதன் பிறகுதான் தனது சொந்த தயாரிப்பில் எம்ஜிஆர் மகன் எனும் படத்தை இயக்கியுள்ளார்.
கிட்டத்தட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் வெளியிட முடியாமல் பைனான்ஸ் பிரச்சினையில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது. தற்போது சத்தமே இல்லாமல் பொன்ராம் விஜய்சேதுபதி படத்தை இயக்கி வருகிறாராம்.
கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் இந்த படத்தை விரைவில் முடித்து வெளிக்கொண்டு வர உள்ளனர். விஜய் சேதுபதியும் ஒரு வெற்றிப்படத்தை கொடுத்து நீண்ட நாளாகி விட்டது.
