சரவணபவன் ரேஞ்சுக்கு பில்டப் விடும் பாண்டியன் ஸ்டோர்ஸ்.. கதிர் உங்க ரேஞ்சுக்கு இதெல்லாம் கம்மி

விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மனைவிக்கு வாங்கிய மருத்துவ செலவிற்கான 5 லட்சம் பணத்தை திருப்பித் தரும் வரை வீட்டிற்கு வரமாட்டேன் என வீட்டை விட்டு வெளியேறிய கதிர்-முல்லை இருவரும் தனியாக ஒரு வீடு எடுத்து வசித்து வருகின்றனர்.

அதன்பிறகு ஹோட்டலில் வேலைக்கு சென்ற கதிர், அந்த வேலை போன பின் சொந்தமாக ஒரு ஹோட்டல் ஆரம்பிக்க வேண்டும் என நினைக்கிறார். அதற்காக ஒரு சின்ன கடையை பார்த்து அதற்கு அட்வான்ஸ் கொடுத்து, ஹோட்டல் கடையை துவங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார்.

இதற்கு முல்லையும் முழு முயற்சியும் ஒத்துழைப்பும் கொடுத்து கதிருக்கு உறுதுணையாக நிற்கிறார். இன்னிலையில் மூர்த்தி அண்ணன் வைத்திருக்கும் டிபார்ட்மென்ட் ஸ்டோருக்கு சென்று அங்கு அண்ணி தனத்திடம் ஹோட்டல் துவங்கப் போகும் விஷயத்தை தெரிவிக்கிறார்.

அனுபவம் இல்லாவிட்டாலும் நம்பிக்கையினால் இந்தத் தொழிலை துவங்குகிறேன் என கூறிய கதிரிடம், ஹோட்டலுக்கு தேவையான மளிகைப் பொருட்களை பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையில் இருந்தே வாங்கிக்கொள் என தனம் பெருந்தன்மையுடன் சொல்கிறார்.

கதிர் வீட்டைவிட்டு வெளியேறிய கோபம் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு இருந்தாலும், அவர் ஹோட்டல் தொழில் மூலம் நல்ல நிலைமைக்கு வருவார் ஜீவா, தனம் உள்ளிட்ட என்று அனைவரும் சந்தோஷப் படுகின்றனர்.

இதன்பிறகு வெள்ளித்திரை போலவே சின்னத்திரையிலும் ஒரே பாடலில் ஓஹோன்னு வரும் கதாநாயகர்கள் போல கதிரும் ஒரே பாடலில் புரோட்டா, தோசை, இட்லி போன்றவற்றை சுட்டு குன்றக்குடியில் இருக்கும் மற்றொரு தொழிலதிபராக மாறி சரவணபவன் ரேஞ்சுக்கு பில்டப் விடும் அளவுக்கு அலப்பறை காட்டப் போகிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்