கடைசில மண்டை மேல இருக்குற கொண்டைய மறந்துட்டியே பாஸ்.. பாண்டியன் ஸ்டோர்ஸ்

விஜய் தொலைக்காட்சியில் மக்களிடையே சிறந்த வரவேற்பை பெற்ற சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். நான்கு அண்ணன் தம்பிகளின் பாச பிணைப்பினை மையமாக கொண்ட கதைக்களம் தான் இந்த சீரியல்.

இதில் கடைசி தம்பியின் கதாபாத்திரமான கண்ணன் காதல் திருமணம் செய்ததால் வீட்டை விட்டு வெளியேற்றப்படுகிறார். இதனால் மிகுந்த மன வருத்தத்துடன் இருக்கும் லக்ஷ்மி அம்மாள் மரணமடைகிறார்.

கண்ணன் வேலையின் காரணமாக வெளியூர் சென்றிருக்கும் நிலையில் அவர் தன் அம்மாவின் இறுதிக் காரியங்களை செய்வாரா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வருகிறது. இந்த காட்சியை கடந்த ஒரு வாரமாக மிகவும் தத்துரூபமாக இந்த சீரியல் வெளியிட்டு வருகிறது.

அதில் லட்சுமி அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை சீலா பிணமாக நடிக்கும் காட்சியில் அனைவரின் பரிதாபத்தையும் அள்ளுகிறார். இவரின் இறுதி சடங்கு நிஜ வாழ்வில் நடக்கும் சம்பிரதாயங்களை போல இந்த சீரியல் காட்டுகிறது இறுதியில் லக்ஷ்மிஅம்மாள் இறுதி ஊர்வலம் நடைபெறுகிறது.

இதன் புரோமோ தற்பொழுது வெளியாகியுள்ளது அதில் மூர்த்தி தனது அம்மாவிற்கு கொள்ளி வைப்பது போல் காட்டப்படுகிறது. மூர்த்தியின் மனைவியான தனம் கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவர் கொள்ளி வைப்பது போல் காட்டப்படும் இந்த புரோமோ ரசிகர்களின் இடையே பலவிதமான கருத்துக்களை பெற்று வருகிறது.

pandiyan-stores
pandiyan-stores

இவ்வளவு தத்ரூபமாக அனைத்தையும் படமாக்கிய இயக்குனர் கடைசியில் இந்த லாஜிக்கை மறந்துவிட்டார் என்று ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்