சொந்த பொண்டாட்டிக்கு கூட இவ்வளவு பண்ணி இருக்க மாட்டீங்க.. வயித்தெரிச்சலில் மீனா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தற்போது சுவாரஸ்யமான கதைக் களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது. அதாவது கதிரின் மனைவி முல்லைக்கு குழந்தை பிறக்காது என தெரிந்த உடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமே கவலையில் இருந்தது.

இந்நிலையில் மூத்த அண்ணன் மூர்த்தி முல்லையின் மருத்துவ செலவுக்கு வெளியிலிருந்து வட்டிக்கு பணம் வாங்கி உள்ளார். மேற்படி முல்லைக்கு நல்லபடியாக சிகிச்சை முடிந்தது. மேலும் டாக்டர் முல்லையை எந்த வேலையும் செய்யாமல் மிகவும் கவனமாக இருக்கும்படி கூறியுள்ளார்.

இதனால் கருவிழிக்கு இமைபோல கதிர் முல்லையை அவ்வளவு அழகாக பார்த்துக் கொள்கிறார். இதைப்பார்த்த மீனாவுக்கு கொஞ்சம் பொறாமையாக இருக்கிறது. அதாவது முல்லையை நடக்கவே விடாமல் கதிர் எங்கு சென்றாலும் தூக்கி செல்கிறார். அத்துடன் முல்லைக்கு எல்லா உதவிகளும் கதிரே செய்கிறார்.

தலை வாருவது, துணி துவைப்பது, சாப்பாடு ஊட்டுவது என முல்லைக்காக அனைத்து வேலைகளையும் கதிரையை பார்த்துக்கொள்கிறார். இதைப்பார்த்த பாண்டியன் ஸ்டோர்ஸ் மொத்த குடும்பமும் மகிழ்ச்சியாக உள்ளது. தனம், கதிர் இந்தளவுக்கு பொண்டாட்டிய பார்த்துப்பான் நினைக்கவே இல்லை என பெருமிதமாக நினைக்கிறாள்.

ஆனால் மீனா மட்டும், முல்லையை இவ்வளவு அக்கறையுடன் கதிர் பார்த்துக்கொள்கிறார் ஆனால் ஜீவா சுத்த வேஸ்ட் என மனதுக்குள்ளேயே கவலைப்பட்ட கொள்கிறார். இவ்வாறு இருக்க எதிர்பாராதவிதமாக முல்லைக்கு வயிற்று வலி வருகிறது. இதனால் பதரி போகிறார்கள் கதிர்.

ஆனால் மருத்துவமனையில் முல்லைக்கு எந்த பிரச்சனையும் இல்லை தற்போது தந்த சிகிச்சையினால் தான் இந்த வயிற்று வலி வந்தது இன்னும் ஒரு வாரம் கழித்து ரிசல்ட் தெரிந்துவிடும் என டாக்டர் கூறுவார். மேலும் இன்னும் சில மாதங்கள் முல்லை, கதிர் ரொமான்ஸ் காட்சிகளை பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் வர இருக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்