அடுத்த சண்டைக்கு அஸ்திவாரம் போடும் மீனா.. கூட்டு சேர்ந்த முல்லை!

விஜய் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அவ்வபோது வில்லியாக மாறிக்கொண்டிருக்கும் மீனா, தற்போது புது பிரச்சினையை கையில் எடுத்துள்ளார். காதலித்து திருமணம் செய்துகொண்ட கண்ணன்-ஐஸ்வர்யா குடும்பத்தாரால் ஒதுக்கப்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்புதான் வீட்டில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

இந்நிலையில் ஐஸ்வர்யா நைட்டி போட்டதற்கு தனம் எதுவும் சொல்லாததால், அதை வைத்து பிரச்சனை செய்த மீனா தற்போது மீண்டும் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யாவை வைத்து பிரச்சனையை உருவாக்குகிறார். ஏனென்றால் படித்துக்கொண்டிருக்கும் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா திருமணத்திற்குப் பிறகு மூர்த்தி வீட்டிலிருந்தே கல்லூரிக்கு செல்கின்றனர்.

இன்னிலையில் இதை விரும்பாத மீனா முல்லையிடம் இஷ்டத்திற்கு ஏற்றி விடுகிறார். ஐஸ்வர்யா போன்று நம்மளும் பாதியில் படிப்பை நிறுத்தி திருமணம் செய்து கொண்டு ,அதன்பிறகு படிப்பை தொடர பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் விட்டிருப்பார்களா? என்ற கொக்கியை மீனா போடுகிறார்.

அத்துடன் மீனா பேசுவதை எல்லாம் முல்லை பொருட்படுத்த விட்டாலும் அவருக்கும் லேசாக சந்தேகம் வந்துள்ளது. இதையெல்லாம் தனம் ஓரமாக நின்று கேட்டுக் கொண்டிருக்கிறார். எனவே குடும்பத்தின் நிம்மதியை குறைக்க நினைக்கும் மீனாவை என்ன சொல்லி சமாதனப்படுத்தி பிரச்சனையை முடிப்பது என தனம் யோசித்துக் கொண்டிருக்கிறார்.

எனவே ஐஸ்வர்யாவிற்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் எக்கச்சக்கமான சலுகை கிடைப்பதாக மீனா எண்ணிக் கொண்டிருக்கிற மீனாவின் நினைப்பு தவறானது என்று தனம் அவ்வபோது புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். இருப்பினும் மீனா அதை ஏற்க மறுக்கிறார்.

இவ்வாறு தினம்தோறும் ஏதாவது ஒரு வில்லங்கத்தை உருவாக்கும் மீனா கடைசியில் பல்பு வாங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார். எனவே தனம் இதை எவ்வாறு சமாளிக்கப் போகிறார் என வரும் எபிசோடில் பொறுத்திருந்து பார்ப்போம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்