சுத்தி சுத்தி நம்மகிட்டே வராங்களே.. புலம்பித் தவிக்கும் பாண்டியன் ஸ்டோர் மீனா

பாண்டியன் ஸ்டோர்ஸ் அதிரடி திருப்பங்களுடன் அரங்கேறி வருகிறது. வீட்டை விட்டு வெளியேறிய கண்ணனை, மூர்த்தியின் பேச்சை மீறி வீட்டுக்குள் அழைத்து வந்துள்ளார் தனம். இதனால் கண்ணனின் மனைவி ஐஸ்வர்யாவால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் பல சிக்கல்கள் வர வாய்ப்புள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் உள்ளதோ மூன்று ரூம்கள். கண்ணன் வருகையால் மீனாவின் ரூம் பறி போகுமோ என்ற அச்சத்தில் உள்ளார் மீனா. இந்நிலையில் காலையில் எல்லோரும் எழுந்து வருவதற்கு முன்பே ஐஸ்வர்யா பலவகையான உணவுகளை சமைத்து முடித்து உள்ளார். அவர் சமைத்த உணவுகளை பார்த்து ஆச்சரியப்படுகிறார் தனம்.

கல்யாணம் ஆகி இவ்வளவு நாளாகியும் இன்னும் நமக்கு சமைக்க தெரியல அதுக்குள்ள ஐஸ்வர்யா நல்லா சமைக்கிறாள் என்று மனதுக்குள்ளேயே பேசிக் கொள்கிறார் மீனா. தனம், கண்ணன் ஐஸ்வர்யா இருவரையும் எங்கு தங்க வைப்பது என்ற பேச்சு ஆரம்பித்தவுடனே அந்த இடத்திலிருந்து நழுவி விடுகிறார் மீனா.

ரூமுக்குள் போன மீனா கயல் பாப்பாவை தூங்க வைக்கிறார். அப்போது யாரோ கதவை தட்டுவது போல் சத்தம் கேட்டவுடன் நம்ம ரூம்ம தான் கேட்க வந்திருக்காங்களோ என பயத்துடன் உள்ளார் மீனா. இவ்வாறு எதார்த்தமாக இருக்கும் மீனாவின் கதாபாத்திரம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

இனிமேல் மீனா, ஐஸ்வர்யா இடையே சுவாரசியமான சண்டை காட்சிகள் நடக்கக்கூடும். தனம் அவருடைய ரூம்மை கண்ணன், ஐஸ்வர்யாவிற்கு தருவார். இவ்வாறு பல சுவாரசியங்கள் உடன் இந்த வார பாண்டியன் ஸ்டோர் தொடர் நகரக் கூடும்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்