குடும்ப செலவுக்கு திண்டாடும் பாண்டியன் ஸ்டோர்ஸ்.. புலம்பித் தவிக்கும் கதிர், முல்லை

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு அடுத்தடுத்த பிரச்சினை வந்து கொண்டிருப்பதால், அதை சரி செய்வதற்கு நான்கு அண்ணன் தம்பிகளும் ஒவ்வொருநாளும் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ் திறப்பதற்கு ஏகப்பட்ட தடங்களை சமாளித்து இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு அடுத்ததாக முல்லைக்கு குழந்தையின்மை என்பது பெரும் மனக் கஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனால் பிச்சு புடுங்கி ரூபாய் 5 லட்சம் பணத்தைத் திரட்டி முல்லைக்கு செயற்கை முறை கருத்தரிப்பு செய்ய முடிவெடுத்து அந்த சிகிச்சை தொடங்கப்பட்டது. எனவே அந்த சிகிச்சை முல்லைக்கு பாசிட்டிவ்வாக அமையுமா என்பதற்காக மீண்டும் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்ற முல்லையை பரிசோதித்த மருத்துவர் கருத்தரிப்பதற்கான சாத்தியக்கூறு அதிகமாக இருப்பதாக கூறியுள்ளார்.

இப்படி முதல் முறையிலேயே ஒரு சிலருக்கு மட்டுமே இந்த சாத்தியக்கூறு தென்ப்பட்டிருப்பதால் முல்லை இந்த சிகிச்சையில் பாதிக்கிணறு தாண்டியதாக டாக்டர் தெரிவித்தார்.

இதன் பிறகு இரண்டு வாரம் கழித்து மீண்டும் ஒருமுறை பரிசோதித்தால் நிச்சயம் கர்ப்பமாக இருக்க வாய்ப்பிருக்கிறது என கூறியது கதிர் உட்பட அவருடைய குடும்பத்தினருக்கு பெரும் சந்தோசத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் இந்த முறையும் ரூபாய் 15 ஆயிரத்தை மருந்து மாத்திரைகாக செலவாகியுள்ளது.

இந்த செலவை குடும்பம் எப்படி சமாளிக்கும் என கதிர் ஒருபுறம் புலம்பு தவிக்கிறான். இருப்பினும் முல்லைக்கு இந்த சிகிச்சை மட்டும் வெற்றி பெற்று குழந்தை பிறந்தால் போதும் என குடும்பம் பணத்தை தண்ணியாக முல்லைக்கு மருத்துவத்திற்காக மட்டும் செலவழித்துக் கொண்டிருக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்