சரவண பவனுக்கு டஃப் கொடுக்கும் பாண்டியன் மெஸ்.. இன்னும் என்னென்ன கொடுமைை பாக்கணுமா!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் சுவாரசியமாக சென்று கொண்டிருக்கிறது. இப்போதெல்லாம் கதிர், முல்லை ரொமான்ஸ் காட்சிகள் தான் அதிகம் இடம்பெற்று வருகிறது. வீட்டைவிட்டு வெளியே போனவுடன் முழு சுதந்திரம் கிடைத்துவிட்டது என வானில் பறக்கிறார்கள்.

தற்போது கதிர் புதிதாக ஹோட்டல் ஒன்றை திறந்துள்ளார். இந்நிலையில் திறப்பு விழாவிற்கு முல்லையின் அம்மா, அப்பா, அக்கா கலந்து கொண்டுள்ளனர். ஆனால் கதிர் வீட்டிலிருந்து யாருமே வராததால் வருத்தத்தில் உள்ளார். மேலும் கடையை அண்ணன் திறந்து வைத்தால் நன்றாக இருக்கும் கதிர் எண்ணுகிறார்.

தம்பி பாசத்தில் மூர்த்தியும் கடைக்கு முன்னே உள்ள மரத்தில் ஒளிந்து கொண்டு கதிரின் கடையைப் பார்த்து ரசிக்கிறார். அப்போது ஒரு குழந்தையிடம் பணத்தை கொடுத்து கடையில் இட்லி, தோசை போன்றவற்றை வாங்கிட்டு வர சொல்கிறார் மூர்த்தி. முதலில் கேட்டதைக் கொடுத்து அனுப்புகிறார் கதிர்.

அதன் பிறகு அண்ணன் தான் வாங்கி வரச் சொல்கிறார் என தெரிந்தவுடன் எக்ஸ்ட்ரா 2 பூரி, தோசையை வைத்து கொடுத்து விடுகிறார். உடனே பார்சலை வீட்டுக்கு எடுத்துட்டு வந்த மூர்த்தி, கயல் உடன் உட்கார்ந்து ரசித்து ருசித்து சாப்பிடுகிறார்.

போற போக்கைப் பார்த்தா சரவண பவனுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு பாண்டியன் மெஸ் நடத்துவார் போல கதிர். மேலும் அண்ணன் தான் முதல் போனியை தொடங்கி வைத்ததால் கடை ஓகோ என வரும். இதனால் கூடிய சீக்கிரத்தில் கதிரும் மிகப்பெரிய ஹோட்டலுக்கு முதலாளி ஆகிவிடுவார்.

அதுமட்டுமல்லாமல் தனது ஹோட்டலுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் பாண்டியன் ஸ்டோர்ஸில் வாங்கி அந்த கடையின் வருமானத்தையும் அதிகரிக்கச் செய்வார். இப்படி அண்ணன், தம்பி பாசத்திற்கு அளவே இல்லாமல் போகும் பாண்டியன் ஸ்டோரிஸ் தொடரில் புயலாக சில பிரச்சனைகளும் வர வாய்ப்புள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்