மீண்டும் பெரும் சிக்கலில் ஐஸ்வர்யா ராய்.. 3வது முறையாக கெடு வைத்த அமலாக்கத்துறை

உலக அழகி பட்டம் வென்றவரும், பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராய் தற்போதும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சட்டவிரோதமாக பணத்தை பதுக்கிய விவகாரத்தில் ஐஸ்வர்யா ராய் நேரில் ஆஜராக வேண்டும் என அமலாக்கத் துறை அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

அதன்படி கடந்த 2016ஆம் ஆண்டு இந்தியாவை சேர்ந்த பல பணக்காரர்கள், நடிகர் மற்றும் நடிகைகள் பனாமா நாட்டில் கருப்பு பணத்தை முதலீடு செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதுமட்டும் அல்லாமல் சட்டவிரோதமாக பணத்தை முதலீடு செய்தவர்களின் பட்டியல் ஒன்றை
ஜெர்மனியை சேர்ந்த பனாமா பத்திரிகை வெளியிட்டிருந்தது.

அந்த பட்டியலில் நடிகை ஜஸ்வர்யா ராயின் பெயர் இடம் பெற்றிருந்தது. இது அந்த சமயத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஐஸ்வர்யா ராய் மட்டுமின்றி சுமார் 700க்கும் அதிகமான சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகளின் பெயர் அந்த பட்டியலில் இருந்தது. எனவே பனாமா ஆவணங்களின் அடிப்படையில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து இதுகுறித்து விளக்கம் அளிக்க அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு சமமன் அனுப்பப்படடுள்ளது. முன்னதாக ஏற்கனவே இரண்டு முறை சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், விசாரணையை ஒத்திவைக்குமாறு ஐஸ்வர்யா ராய் கோரியிருந்தார்.

அவரின் கோரிக்கையை தொடர்ந்து தற்போது மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. இந்த முறை நிச்சயம் நேரில் ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த பட்டியலில் ஐஸ்வர்யா ராய் மட்டும் அல்லாமல் அவரது சகோதரர் மற்றும் குடும்பத்தினர் பெயரும் இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.

aishwarya-raai
aishwarya-raai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்