விஜய்க்கு சொன்ன கதையை நம்ம சேர்ந்து பண்ணலாம்.. பா ரஞ்சித்தை கைக்குள் போட்டுக்கொண்ட முன்னணி நடிகர்

விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச கட்ட மார்க்கெட் உள்ள நடிகராக வலம் வருவதால் அவரை வைத்து படம் இயக்க பல இயக்குனர்கள் தேவுடு காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் தமிழ் சினிமாவின் சென்சேஷனல் இயக்குனர்கள் பலரும் அவருக்கு கதை சொல்லி வரிசையில் காத்திருக்கின்றனர்.

அந்த வரிசையில் இருப்பவர்தான் பா ரஞ்சித். சமீபத்தில் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் சூப்பர் டூப்பர் வெற்றியை பெற்றது. இதன் மூலம் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளார் பா ரஞ்சித்.

அதனைத் தொடர்ந்து இளம் நடிகர்கள் இருவரை வைத்து நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை எடுத்து வருகிறார். முழுக்க முழுக்க காதல் கதையை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இதனைத்தொடர்ந்து அடுத்ததாக பா ரஞ்சித் முன்னணி நடிகரான விக்ரமுடன் இணைந்து ஒரு படம் செய்ய உள்ளார். அந்த படம் ஒரு சூப்பர் ஹீரோ கதை எனவும் கூறுகின்றனர். இந்த கதை ஏற்கனவே தளபதி விஜய்க்கு சொல்லப்பட்டது தான்.

ஏற்கனவே விஜய் சில சூப்பர் ஹீரோ படங்களில் நடித்த படங்கள் சரியாக போகாததால் பா ரஞ்சித் படத்தில் நடிக்க தயக்கம் காட்டினாராம். தற்போது அந்த படத்தின் கதையை கேட்ட விக்ரம் தானே நடிக்கிறேன் என ஓகே சொல்லிவிட்டாராம்.

விக்ரமும் கடந்த சில வருடங்களாக பெரிய வெற்றிப்படங்கள் கொடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் லட்டு மாதிரி ஒரு கதை கிடைத்தால் சும்மா விடுவாரா. உடனடியாக அடுத்த கட்ட பணிகளை ஆரம்பிக்க சொல்லி விட்டாராம்.

pa-ranjith-vikram
pa-ranjith-vikram
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்