பா ரஞ்சித்தின் அடுத்த பட ஹீரோ யார் தெரியுமா.? மிரளவைக்கும் உண்மை சம்பவம்!

ஜாதிக்கு குரல் கொடுக்கும் பா ரஞ்சித்தின் அடுத்த பட ஹீரோவைப் பற்றிய தகவல் வெளிவந்துள்ளது. 2012ம் ஆண்டு அட்டகத்தி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் பா.ரஞ்சித்.

அதற்குப் பின்னர் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை படங்களை வெளியிட்டு வருகிறார். மெட்ராஸ், கபாலி, காலா போன்ற படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

கபாலி, காலா போன்ற படங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து இயக்குவதற்கான பிரம்மாண்ட வாய்ப்பு கிடைத்தது. மெட்ராஸ் படத்திற்கு பின் சூர்யாவுடன் இணைய போவதாக தகவல் வெளிவந்தது.

ஆனால் அப்பொழுது சூர்யா மற்றும் பா ரஞ்சித் இருவருமே அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருந்ததால், அந்த முயற்சி நடக்கவில்லையாம். தற்போது 2021 ஆம் ஆண்டு சார்பட்டா பரம்பரை என்ற படத்தை வெளியிட உள்ளார் ரஞ்சித்.

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம் கோலிவுட்டில் ஆர்யாவிற்கு ஒரு மைல்கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார் ரஞ்சித்.

சார்பட்டா பரம்பரை படத்திற்கு பின் சூர்யாவுடன் இணையப் போவதாக தற்போது தகவல் வெளிவந்துள்ளது. மிரட்டாளன உண்மை சம்பவத்தை மையமாக கதை ஒன்று சூர்யாவிடம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

pa-ranjith-suriya-cinemapettai
pa-ranjith-suriya-cinemapettai

விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சூர்யாவின் ரசிகர்கள்  கொண்டாட்டத்தில் உள்ளனர். எது எப்படியோ ஜாதி இல்லாமல் கதை இருந்தால் ரசிகர்கள் கொண்டாட தான் செய்வார்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்