புதிய படத்தில் இணையும் சூர்யா, கார்த்தி.. மிரட்டலான இயக்குனர், தரமான சம்பவம் இருக்கு.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய இருவரும் சகோதரர்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். இவர்கள் இருவருமே தற்போது தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து புதிய படங்களில் ஒப்பந்தமாகி மிகவும் பிசியாக நடித்து வருகின்றனர்.

அந்தவகையில் சூர்யா நடிப்பில் ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன், வாடிவாசல் உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து தயாராகிக் கொண்டிருக்கின்றன. அதேபோல் நடிகர் கார்த்தி தற்போது இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இதனை அடுத்து பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சர்தார் என்ற படமொன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை முடித்தவுடன் கார்த்தி சார்தார் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இயக்குனர் முத்தையாவின் இயக்கத்தில் கார்த்தி புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாகவும், இப்படத்தை நடிகரும், கார்த்தியின் அண்ணனுமான சூர்யா தனது 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

karthi-suriya
karthi-suriya

ஏற்கனவே இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி வெளியான கொம்பன் படம் மாபெரும் வெற்றி பெற்றது. எனவே தற்போது இவர்கள் இருவரது கூட்டணியில் உருவாக உள்ள இப்படமும் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் ஏற்கனவே கார்த்தி நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்தை சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சூர்யா தற்போது படங்களில் நடிப்பதை விட தயாரிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது இவரது தயாரிப்பு நிறுவனம் மூலம் அடுத்தடுத்து நான்கு படங்கள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை