கோ படம் ஹிட்டாகியும் வாய்ப்புத்தேடி தெருத்தெருவா அலைஞ்சேன்.. மனம் நொந்த நெற்றிக்கண் அஜ்மல்

சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான நெற்றிக்கண் படத்தில் நயன்தாராவை விட அதிக பாராட்டையும் பெயரையும் பெற்றுள்ளார் நடிகர் அஜ்மல். தற்போது தான் தன்னுடைய செகண்ட் இன்னிங்சை தொடங்கியுள்ளார்.

தமிழ் சினிமாவின் மைல்கல் படமாக அமைந்த அஞ்சாதே படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அஜ்மல். மிஷ்கின் இயக்கிய அந்த படத்தில் அவரின் கதாபாத்திரம் மிக வலுவாக இருந்ததால் பாராட்டுகள் கிடைத்தது.

அதன் பிறகு ஜீவா நடிப்பில் கே வி ஆனந்த் இயக்கத்தில் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிய கோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் மிரள வைத்தார். அந்த படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் இவருக்கு மிகப்பெரிய உயரம் கிடைக்கும் என பல பத்திரிகைகளில் செய்திகளாக வெளியிட்டன.

ஆனால் அதன் பிறகு வாய்ப்பு தேடி ரோடு ரோடாக அலைந்த கஷ்டம் எனக்குத்தான் தெரியும் என புலம்பியுள்ளார் அஜ்மல். சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் கோ படத்திற்கு பிறகு நடித்த சில படங்கள் சரியாக அமையவில்லை என்றும், சில படங்கள் ஃபைனான்ஸ் ரீதியாக பெட்டிக்குள் முடங்கியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக சில வருடங்கள் சினிமா பக்கம் தலை காட்டாமல் இருந்த எனக்கு நெற்றிக்கண் படத்தின் மூலம் மீண்டும் செகண்ட் இன்னிங்சை ஏற்படுத்திக் கொடுத்த விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவுக்கு நன்றி எனவும் உணர்ச்சி பொங்க தெரிவித்துள்ளார் அஜ்மல்.

முன்னதாக அருள்நிதி நடிப்பில் வெளியான இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்திலும் அஜ்மலின் நடிப்பு பேசப்பட்டது. அஜ்மலின் நடிப்பு பேசப்படுகிறதே தவிர அவருக்கு பட வாய்ப்புகள் வந்த பாடில்லை என்பதே சோகமான விஷயம். கண்டிப்பாக நெற்றிக்கண் படத்திற்கு பிறகு ஹீரோ வாய்ப்பு இல்லை என்றாலும் குறைந்தது நல்ல நல்ல வில்லன் கதாபாத்திரங்களிலாவது நடிப்பார் என எதிர்பார்க்கலாம்.

ajmal-cinemapettai
ajmal-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்