Tamil Cinema News | சினிமா செய்திகள்
நான் கூடத்தான் அப்படி.. 3ம் தாரமாக கல்யாணம் செய்தவரை கிண்டல் செய்த நெட்டிசன்கள்.. நேஹா கோபம்
தன்னை மூன்றாவது தாரமாகத் திருமணம் செய்து கொண்டவரைப் பற்றிய கிண்டல்களுக்குப் பதிலளித்துள்ளார் நடிகை நேஹா பெண்ட்ஸே.
‘இனிது இனிது காதல் இனிது’, ‘மெளனம் பேசியதே’ போன்ற தமிழ்ப் படங்களில் நடித்தவர் நேஹா. மராத்தி மற்றும் இந்தியில் பல படங்களில் நடித்துள்ள இவர்,. ஷர்துல் பயஸ் என்பவரை சில வாரங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். ஷர்துல் ஏற்கெனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்தானவர், அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.
இந்நிலையில் மூன்றாவதாக நேஹாவை ஷர்துல் திருமணம் செய்ததை கிண்டல் செய்து நிறைய பேர் இணையதளங்களில் கருத்து பதிவிட்டுள்ளார்.
“இது என்ன பெரிய விஷயமா? இன்று பலரும் பல்வேறு காரணங்களுக்காகத் தாமதமாகத் திருமணம் செய்யுறாங்க. திருமணத்துக்கு முன் உறவுகளில் இருக்குறாங்க. அதில் அர்ப்பணிப்பு, காதல், உடல்ரீதியாக நெருக்கமாக இருப்பது என அனைத்தும் திருமணத்தில் இருப்பதைப் போலவே இருக்குது..
ஒரே வித்தியாசம் அதில் திருமணம் என்ற சட்ட ரீதியான முத்திரை இருக்காது. அதனால் ஏன் ஷர்துல் விவாகரத்தானவர் என்பதைப் பற்றி பலர் பேசுகின்றனர்? அவர் நேர்மறை எண்ணங்கள் நிறைந்தவர். அவரது கடந்த கால வாழ்க்கை பற்றி எதுவும் என்னிடம் மறைத்ததில்லை. நானும் திருமணத்துக்கு முன்பு உறவிலிருந்தவள் தான்” என்று நேஹா கூறியிருக்கிறார்.
