Connect with us
Cinemapettai

Cinemapettai

vijay-nayanthara

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சர்கார் விஜய் போல் தனி விமானத்திலிருந்து கெத்தாக இறங்கிவரும் நயன்தாரா.. செம ஸ்டைலாக வெளிவந்த புகைப்படம்

நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா(nayanthara). கமர்ஷியல் படங்களாக இருந்தாலும் சரி, கதையின் நாயகியை மையப்படுத்தி உருவாகும் படமாக இருந்தாலும் சரி. இரண்டு வகையான திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் அடுத்ததாக நயன்தாரா சோலோ ஹீரோயினாக நடித்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் திரைப்படம் நெற்றிக்கண். மேலும் ரஜினியின் அண்ணாத்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் நயன்தாரா சோலோ ஹீரோயினாக நடித்து ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகி கோடிக்கணக்கில் வசூல் குவித்த திரைப்படம் மூக்குத்தி அம்மன். இந்த படத்தின் மூலம் நயன்தாரா அனைத்து மாநில ரசிகர்களையும் கவர்ந்து விட்டார் என்றே சொல்லலாம்.

இந்நிலையில் நயன்தாரா தனது சம்பளத்தை திடீரென உயர்த்தி விட்டதாக தெரிகிறது. ஏற்கனவே நாலு கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த நயன்தாரா மூக்குத்தி அம்மன் படத்திற்கு கிடைத்த வரவேற்பால் தற்போது 8 கோடியாக சம்பளத்தை உயர்த்தி விட்டாராம்.

பாலிவுட் நடிகைகளுக்கு பிறகு தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக நயன்தாரா மாறியுள்ளது கோலிவுட் வட்டாரத்தில் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. எவ்வளவு கேட்டாலும் கொடுக்க தயாரிப்பாளர்களும் ரெடியாக இருக்கின்றனர்.

அண்ணாத்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் தற்போது ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தன்னுடைய காட்சிகளில் நடிக்க நயன்தாரா ஹைதராபாத்துக்கு தனி விமானத்தில் சென்றுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

nayanthara-cinemapettai

nayanthara-cinemapettai

Continue Reading
To Top