நயன்தாராவை பாலிவுட்டுக்கு வலைவிரிக்கும் விஜய் பட வெற்றி இயக்குனர்.. அம்மணி சிக்குவாரா.?

கோலிவுட்டில் நம்பர்-1 நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நயன்தாரா. இவருக்கு அறிமுகம் தேவையே இல்லை, தனது தனித்துவமான நடிப்பின் மூலம் தமிழ் ரசிகர் மத்தியில் நீங்கா இடம் பிடித்து விட்டார்.

இவரை தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களில் நடிக்க வைப்பதற்காக பல முதலாளிகள் வலை விரித்தனர். ஆனால் நயன்தாரா எதிலுமே சிக்கவில்லை தமிழ் திரைப்படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து நடித்து வருகிறார்.

இப்படி இருக்கும் பட்சத்தில் சம்பளம் அதிகமாக கொடுக்கிறோம் பாலிவுட்டில் வந்து நடியுங்கள் என்று பலமுறை வாய்ப்புகளை உதறி விட்டார் நயன்தாரா. தற்போது நயன்தாராவை வைத்த 2 ஹிட் படங்களை இயக்கிய அட்லி பாலிவுட்டில் நடிப்பதற்கு வாய்ப்பு தருவதாக அழைத்து உள்ளாராம்.

ராஜா ராணி மற்றும் பிகில் படத்தில் ஏற்பட்ட நட்பின் மூலமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். அடுத்து பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து இயக்க உள்ளார் அட்லி. இந்த படத்திற்கு கதாநாயகியாக நயன்தாராவை பேசி வருகிறாராம்.

எப்படியாவது அதிக தொகை கொடுத்து நயன்தாராவை பாலிவுட்டுக்கு இழுத்து விட வேண்டும் என்பதே அவரின் ஆசை. ஆனால் அம்மணி இதில் சிக்குவாரா என்பது கேள்விக்குறி தானாம்.

தன்னைப்பற்றிய எவ்வளவு வதந்திகள் வந்தாலும் அசராமல் தற்போது வரை கம்பீரமாக கோலிவுட்டில் நடை போட்டு வருகிறார் நயன்தாரா.

atlee-sharukh-cinemapettai
atlee-sharukh-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்