திருமணத்திற்கு பின் வெளிவந்துள்ள நயன்தாராவின் ஓ 2.. படம் எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம்

தற்போது திருமண கொண்டாட்டத்தில் இருக்கும் நடிகை நயன்தாராவின் நடிப்பில் உருவாக்கியுள்ள ஓ 2 திரைப்படம் இன்று டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகி உள்ளது. சில நாட்களுக்கு முன்பு வெளியான இந்தப் படத்தின் டிரெய்லர் பலரையும் கவர்ந்து இருந்தது.

அந்த வகையில் இன்று வெளியாகியிருக்கும் இந்த திரைப்படம் தற்போது கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. சமீபகாலமாக கதைக்கு முக்கியத்துவம் தரும் வகையில் சோலோ ஹீரோயின் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நயன்தாரா இந்தத் திரைப்படத்தையும் அந்த லிஸ்டில் சேர்த்துள்ளார்.

ஆனால் மாயா, அறம் போன்ற திரைப்படங்களில் தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த நயன்தாராவுக்கு இந்த படத்தில் அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு கதையின் போக்கு சில குழப்பங்களை ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது.

கதைப்படி கணவன் இல்லாமல் குழந்தையை வளர்க்கும் நயன்தாரா சுவாசக்கோளாறு பிரச்சினையினால் பாதிக்கப்பட்டுள்ள தன் மகனின் ட்ரீட்மெண்ட்டுகாக கொச்சிக்கு பேருந்தில் செல்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக ஏற்படும் நிலச்சரிவின் காரணமாக பேருந்து ஒரு பள்ளத்தில் சிக்கிக் கொள்கிறது.

இதனால் பேருந்தில் இருக்கும் சக பயணிகள் உட்பட அனைவரும் சுவாசிக்க முடியாமல் திணறுகின்றனர். ஒரு கட்டத்தில் தாங்க முடியாத பயணிகள் நயன்தாராவின் மகன் சுவாசிப்பதற்காக வைத்திருக்கும் ஆக்சிஜன் சிலிண்டரை பறிக்க முயற்சி செய்கின்றனர்.

இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையிலிருந்து தன் மகனை நயன்தாரா எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் படத்தின் கதை. அற்புதமான கதையாக இருந்தாலும் இயக்குனர் அதை சரியான விதத்தில் ரசிகர்களுக்கு கொடுப்பதில் தவறு செய்திருக்கிறார்.

படத்தில் பல இடங்களில் குறும்படம் பார்ப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது. மேலும் நயன்தாராவின் திறமையை இயக்குனர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றே தெரிகிறது. சில இடங்களில் ஆக்ரோஷமாக இருக்கும் அவருடைய நடிப்பு பல இடங்களில் மிஸ் ஆகிறது.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருக்கும் யூடியூப் பிரபலம் ரித்விக் இந்த படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளார். புதுமுகம் என்று சொல்லமுடியாத அளவுக்கு அவருடைய நடிப்பு அற்புதமாக இருக்கிறது. இனி வரும் காலங்களில் தமிழ் சினிமாவில் இவருக்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைக்கும்.

தற்போது இந்தப் படத்தை பார்த்த ரசிகர்கள் ட்விட்டர் தளத்தில் தங்களுடைய கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். அதன்படி வழக்கம்போல நயன்தாராவின் நடிப்பு நன்றாக இருக்கிறது என்றும், ஓரளவிற்கு படம் மிரட்டலாக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர்.

nayanthara-o2
nayanthara-o2
Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்