நயன்தாராவின் அடுத்த 3 படங்களை தொக்கா தூக்கிய நிறுவனம்.. மார்க்கெட் குறையுமா.? கடுப்பில் லேடி சூப்பர் ஸ்டார்

தமிழ்திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவிற்கு தொடர்ந்து பல சிக்கல்கள் வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பல வருடங்களாக கஷ்டப்பட்டு தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நேரத்தில் தொடர்ந்து இவரது படங்களுக்கு பிரச்சனைகள் வருவதால் படத்தின் தயாரிப்பாளர் என்ன செய்வதெனத் தெரியாமல் தவித்து வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக நயன்தாரா நடிப்பில் வெளியான தர்பார் மற்றும் மிஸ்டர் லோக்கல் போன்ற படங்கள் ரசிகர் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாததால் தற்போது நயன்தாரா வைத்து படத்தை தயாரித்த பல தயாரிப்பாளர்கள் போட்ட பணம் கிடைக்குமா என பயத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு பக்கம் கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் திறக்கப்படாமல் உள்ளனர். அப்படி திரையரங்குகள் திறந்தாலும் நயன்தாரா நடித்த படங்கள் வெற்றி பெறுமா என்பது தெரியவில்லை என்பதால் படத்தின் தயாரிப்பாளர்கள் திடீரென படத்தை OTT-யில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

nayanthara-cinemapettai
nayanthara-cinemapettai

நயன்தாரா நடித்துள்ள நெற்றிக்கண், ராக்கி மற்றும் கூலாங்கள் ஆகிய படங்கள் விரைவில் OTTயில் வெளியிட திட்டமிட்டுள்ள தகவலை கேட்டறிந்த நயன்தாரா தற்போது கடுப்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கு காரணம் நயன்தாரா நடிப்பில் திரையரங்கில் வெளியான 2 படங்களுமே தோல்வி சந்தித்துள்ளன.இந்த படங்களில் ஏதாவது 1 திரையரங்கில் வெற்றி பெற்றால் மட்டும் தான் அடுத்தடுத்து இவரது படங்களுக்கு திரையரங்குகளில் வரவேற்பு இருக்கும்.

அதனால் படத்தின் தயாரிப்பாளர்களிடம் OTT-யில் படத்தை வெளியிடக்கூடாது. திரையரங்கில் வெளியிட வேண்டும் என நயன்தாரா திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்