நயன்தாராவுக்கு கவிதை எழுதிய பிரபலம்.. ப்ப்பபபா மனுஷன் என்னம்மா ரசிச்சு எழுதிருக்காரு

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. எந்த ஒரு நடிகையும் இத்தனை ஆண்டுகள் திரை உலகில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது கிடையாது. ஆனால் பல ஆண்டுகளாக தனது மார்க்கெட் குறையாமல் வலம் வரும் ஒரே நடிகை என்றால் அது நயன்தாரா மட்டுமே.

என்னதான் நடிகைகள் திருமணமாகாமல் இருந்தாலும், வயது அதிகரித்தால் அவர்களை அக்கா மற்றும் அண்ணி வேடங்களில் நடிக்க வைக்கவே இயக்குனர்கள் விரும்புவார்கள். ஆனால் நயன்தாரா இந்த வயதிலும் தொடர்ந்து ஹீரோயினாக நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடித்து தமிழ் திரையுலகை தன் கைவசம் வைத்துள்ளார்.

ஹீரோக்களை புக் செய்வதைப் போல, நயன்தாராவை மட்டுமே நம்பி படங்கள் வெளிவர தொடங்கிவிட்டன. நயன்தாரா ‘ஒன் விமன் ஆர்மி’யாக தமிழ் சினிமாவை கலக்கிக்கொண்டிருக்கிறார். நயன்தாராவிற்கு சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பு வயதிலும் ரசிகர்கள் உள்ளனர்.

Nanjil-Sampath
Nanjil-Sampath

அந்த வரிசையில் பிரபல அரசியல்வாதியும், பேச்சாளருமான நாஞ்சில் சம்பத்தும் நயன்தாராவின் தீவிர ரசிகராக இருப்பார் போல. சமீபத்தில் இவர் நயன்தாரா குறித்து கூறிய கவிதை தற்போது வைரலாகி வருகிறது.

தனியார் இணையதளத்திற்கு நாஞ்சில் சம்பத் அளித்த பேட்டியின் போது நயன்தாரா குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது சிலாகித்த அவர், நயன்தாராவை நயாகராவுன் ஒப்பிட்டு ஒரு கவிதை கூறியுள்ளார். அந்த கவிதை இதோ…

‘நயன்தாரா…

அவள் நயாகரா..

அதில் நனைய பலர் விரும்புகிறார்கள்…

ஆனால் நயாகராவில் நனைய அனுமதியில்லை!

நயன்தாரா… எதையும் விலை கொடுத்து வாங்கும் அளவுக்கு எனக்கு வசதியில்லை!

ஆனால் நயன்தாராவுக்கு கொடுக்க உலகத்தை வாங்கலாமா என ஆசைப்படுகிறேன்!”

என, நயன்தாரா பற்றி நாஞ்சில் சம்பத் உருகி உருகி கூறிய கவிதை தான், தற்போது டிரெண்ட் ஆகி வருகிறது. நயன்தாராவின் கோடிக்கணக்கான ரசிகர் பட்டாளத்தில் நாஞ்சில் சம்பத் போன்ற பிரபலங்களும் அடங்கியிருக்கிறார்கள் என்பது இவரது கவிதை மூலம் தெரியவந்துள்ளது.

வயது ஏற ஏற நயன்தாராவின் மார்க்கெட்டும், ரசிகர்களின் எண்ணிக்கையும் ஏறிக்கொண்டே செல்கிறது. இன்னும் சில வருடங்களுக்கு நயன்தாராவை அசைக்கவே முடியாது.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்