எதற்கும் துணிந்தவன் – சூர்யாவுக்கு வில்லனாகும் நயன்தாராவின் தம்பி.. எதிர்பார்ப்பைக் கிளப்பிய லேட்டஸ்ட் அப்டேட்

இந்த ஆண்டு டிசம்பர் மாதம் திரைக்கு தயாராகிக் கொண்டிருக்கும் படம்தான் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’. இந்தப் படத்தை இயக்குனர் பாண்டியராஜன் இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் டி இமான் இசையமைத்துள்ளார். கிட்டத்தட்ட படப்பிடிப்புகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில், சென்னையில் ஒரு வாரத்திற்கு படத்திற்கான முக்கிய அதிரடி காட்சிகள் படமாக்கப்பட உள்ளது.

இந்நிலையில் படத்தில் வில்லனாக நடிக்கும் கதாபாத்திரத்தைப் பற்றிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தப்படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக இளம் நடிகர் சரண் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் முதல்முதலாக நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஏற்கனவே மணிரத்தினத்தின் கடல் படத்தில் கௌதம் கார்த்திக்கின் சிறுவயது கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாகவும் சரண் நடித்திருப்பார். அதேபோல் தனுஷ் நடித்த வடசென்னை படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தம்பியாகவும் சரண் நடித்துள்ளார்.

இதைப்போல் அண்மையில் நயன்தாரா நடிப்பில் வெளியான ‘நெற்றிக்கண்’ படத்தில் சரண் தனது அட்டகாசமான நடிப்பை வெளிக் காட்டி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்தப்படத்தில் நயன்தாராவிற்கு பிடித்தமான தம்பியாகவும் சரண் நடித்திருந்ததால், எக்கச்சக்கமான ரசிகர்களை நெற்றிக்கண் படத்தின் மூலம் பெற்றார்.

saran-cinemapettai
saran-cinemapettai

எனவே சரண் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் வில்லனாக நடித்து, தனது வித்தியாசமான கோணத்தை வெளிப்படுத்த உள்ளார் என்பதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்