வார்த்தை மாறிய நயன்தாரா..ஆப்பு வைத்த தயாரிப்பு நிறுவனம்

திரையுலகில் ஹீரோக்களுக்கு இணையாக ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக உள்ளது. இதுதவிர பாலின பாகுபாடு காரணமாக சம்பளம் போன்ற இதர சலுகைகளும் மறுக்கப்படுவதாக நாயகிகள் புகார் கூறி வருகின்றனர். இருப்பினும் பல தடைகளை தாண்டி பல ஆண்டுகளாக சினிமாவில் ஆதிக்கம் செலுத்தும் நடிகை என்றால் அது நயன்தாரா மட்டுமே.

தற்போது வரை டாப் ஹீரோயினாக சோலோ நாயகி படங்களில் நடித்து அசத்தி வருகிறார். இவரின் இடத்தை தற்போது வரை வேறு எந்த ஹீரோயினாலும் பிடிக்க முடியவில்லை. அதனால் தான் இவரை ரசிகர்கள் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கிறார்கள் போல.

இந்தாண்டு நயன்தாரா சோலோ நாயகியாக நடித்து வெளியான நெற்றிக்கண் படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல் ரஜினிகாந்துடன் ஜோடியாக நடித்த அண்ணாத்த படமும் ஓரளவிற்கு வெற்றி பெற்றது. இந்நிலையில் நயன்தாரா டிரீம் வாரியர்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்காக O2 என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படத்திற்காக நயன்தாரா 4.5 கோடி சம்பளமாக பெற்றுள்ளாராம். வெறும் 10 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் தற்போது 22 கோடி ரூபாய்க்கு வியாபாரமாகியுள்ளது. இதனால் படக்குழுவினருக்கு மிகப்பெரிய தொகை லாபமாக கிடைத்துள்ளது.

இந்நிலையில் தங்களின் அடுத்த படத்திற்கும் நயன்தாராவையே ஒப்பந்தம் செய்ய முடிவு செய்து டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் நயன்தாராவை அணுகியுள்ளது. O2 படம் அதிக லாபம் பெற்றதை அறிந்த நயன்தாரா தனது சம்பளத்தை 4.5 கோடியில் இருந்து 6 கோடியாக உயர்த்தி விட்டாராம்.

இதனால் அதிர்ச்சி அடைந்த டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் நயன்தாரா ரிஜெக்ட் செய்து விட்டு தற்போது வேறு நாயகியை தேடி வருகிறார்களாம்.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை