கவர்ச்சிக்காடாக மாறியும் வாய்ப்பு வரல.. கொரோனாவில் சுதாரித்துக் கொண்ட தேசிய விருது பட நடிகை

தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர், தமிழில் தேசிய விருது வென்ற படத்தில் நடித்தது மூலம் தமிழ் ரசிகர்களின் ஃபேவரட் நடிகையாக மாறினார். இவர் ஹீரோயின் ஆக மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் பிசிறு தட்டாமல் நடிப்பார்.

இருப்பினும் பல படங்களில் நடித்திருந்தாலும் பெரிதாக இவருக்கு பெயரை பெற்று தரவில்லை என்பதால் ஒரு மாற்றத்திற்காக கதாநாயகியாக நடிக்கும்போதே சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்தார். இப்படி தமிழ் மற்றும் மலையாளம் போன்ற இரண்டு மொழிகளிலும் பயங்கர பிசியாக இருந்த அந்த நடிகை, ஒரு கட்டத்தில் சோசியல் மீடியாவில் கவர்ச்சிக்காடாகவே மாறினார்.

Also Read: 23 வருட திருமண வாழ்க்கையை முடித்து வைத்த நடிகை.. வாரிசு நடிகையின் கட்டுப்பாட்டில் இருக்கும் விஜய்

தன்னுடைய சமூக வலைதளங்களில் மறைக்க வேண்டிய எல்லாவற்றையும் வெளிப்படையாக காட்டி ரசிகர்களை ஜொள்ளு விட வைத்தார். அப்போதாவது பட வாய்ப்பு வரும் என்று நினைத்தார். இருப்பினும் அவரால் மீண்டும் பழைய இடத்தை பிடிக்க முடியாமல் போனது. இதனால் உஷாரான கவர்ச்சிப் புயல் கொரோனாவால் சுதாரித்துக் கொண்டு புதிய தொழிலை துவங்கினார்.

அதன் விளைவாக சென்னையில் ஆர்ட் கேலரியை துவங்கி ஃபேஷன் ஷோ நடத்தியது மட்டுமின்றி, சிலருக்கு விருதுகளையும் வழங்கி கௌரவித்தார். கதாநாயகி என்பது ஒரு கட்டத்தில் மட்டுமே. அதன்பின் என்னவாக இருக்கப் போகிறோம் என்ற கேள்வி கொரோனா காலகட்டத்தில் அந்த கவர்ச்சி புயலுக்கு தோன்றி இருக்கிறது.

Also Read: அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு ஓகே சொல்லி சிக்னல் கொடுத்த நடிகை.. அடுத்தடுத்து குவியும் வாய்ப்பு

இதனால் சினிமாவில் பல்துறை கலைஞர்களுடன் பயணித்து அவர்களிடம் நிறைய விஷயத்தை கற்றுக் கொண்டு புதிய தொழில் துவங்கும் முடிவிற்கு வந்தார். இப்போது மாடலிங், போட்டோகிராபி, மேக்கப், ஆடை வடிவமைப்பு போன்ற பல விஷயங்கள் அந்தக் கவர்ச்சி புயல் தற்போது துவங்கியிருக்கும் ஆர்ட் கேலரியில் இருக்கிறதாம்.

மேலும் சில தொழில்களையும் விரைவில் துவங்க திட்டமிட்டுள்ளதாகவும், படங்களிலும் தொடர்ந்து நடிப்பேன் என்றும் கவர்ச்சி நடிகை கூறியுள்ளார். இவரை போலயே சில நடிகைகள் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் சுதாரித்துக் கொண்டு வேறு தொழிலை தேர்ந்தெடுக்கின்றனர். அதிலும் இவர் காட்டிய எக்குத்தப்பான கவர்ச்சிக்கு பலான தொழிலை தேர்வு செய்யாமல் ஆர்ட் கேலரியை துவங்கி இருப்பது கொஞ்சம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Also Read: ஒரே நேரத்தில் இரட்டை சவாரி செய்த நடிகர்.. 2 மனைவிகளால் மார்க்கெட்டை தொலைத்த அவலம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்