பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் நமிதா.. காரணம் என்ன தெரியுமா.?

பிக்பாஸ் 5 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் திருநங்கை நமிதா மாரிமுத்து. தன்னுடைய தைரியமான பேச்சின் மூலம் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்த போட்டியாளர் இவர்.

தற்போது நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரம் முடிவதற்குள்ளாகவே நமிதா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சில தவிர்க்க முடியாத காரணங்களால் நமீதா வீட்டை விட்டு தானாகவே வெளியேறியதாக கூறப்படுகிறது.

நமிதா திடீரென வெளியேறிய செய்தி பலரையும் வியப்புக்குள்ளாக்கியது. பல கனவுகளுடன் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த நமிதா திடீரென ஏன் வெளியேறினார்? என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும் இந்த செய்தி உறுதிப்படுத்தப்பட்ட தகவல். இதுகுறித்து சனிக்கிழமையான இன்று நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசன் அறிவிப்பார் என்று தெரிகிறது.

நமிதாவின் வெளியேற்றத்தால் பிக்பாஸ் வீட்டில் தற்போது 17 போட்டியாளர்கள் உள்ள நிலையில் ஒயில்டு கார்டு என்ட்ரியாக மீண்டும் ஒருவர் உள்ளே வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்