கடுமையாக எச்சரித்த நகுலின் மனைவி.. இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள்

தமிழ் சினிமாவில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் தான் நடிகர் நகுல். அதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இவரது படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. இவராலும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து நிலைத்து இருக்க முடியவில்லை. தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் நகுலின் மனைவி ஸ்ருதி நெட்டிசன்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். நடிகர் நகுல் மற்றும் ஸ்ருதி தம்பதியினருக்கு சில மாதங்களுக்கு முன்பு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு அகீரா என பெயர் வைத்துள்ளனர். தம்பதிகள் இருவரும் தனது மகளின் புகைப்படத்தை அடிக்கடி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வந்ததுடன், குழந்தை வளர்ப்பு குறித்து பேட்டி மற்றும் லைவ் போன்றவற்றிலும் அடிக்கடி பேசி வருகின்றனர்.

இந்நிலையில், அகீராவின் அழகிய புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் வழக்கம் போல் அந்த குழந்தைக்கென தனி ஃபேன் பேஜ் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். இதுகுறித்து ஏற்கனவே லைவ் ஒன்றில் கடுமையாக பேசி அகீராவுக்காக ஆரம்பிக்கப்பட்ட பக்கத்தை நீக்குமாறு நகுல் கேட்டுக்கொண்டார். ஆனால், நெட்டிசன்கள் நீக்கவில்லை.

nakkhul
nakkhul

இதனையடுத்து தற்போது தனது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி பக்கத்தில் நகுலின் மனைவி ஸ்டாரி ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த ஸ்டோரியில் அகீரா பேன் பேஜின் ஸ்கீரின் ஷாட்டை பதிவிட்டு, அதில் பேக் என்ற வார்த்தையை ஹைலைட் செய்திருக்கிறார்.

கூடவே, “எங்களுக்கு உங்கள் அன்பு புரிகிறது. ஆனால், தயவுசெய்து பொறுமையாக சொல்கிறோம் கேட்டு கொள்ளுங்கள், நிறுத்தி கொள்ளுங்கள். மைனராக இருக்கும் குழந்தைக்கு பேன் பேஜ் உருவாக்குவது தவறு. உங்களுடைய சொந்த குழந்தையாக இல்லாத போது அடுத்தவர்கள் குழந்தைக்காக ஏன் இப்படி செய்கிறீர்கள்?” என காட்டமாக கூறியுள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்