குரு மாதிரி நம்பினவரை கழுத்தறுத்து விட்ட பாலா.. இப்ப வர எழுந்திருக்க முடியாத ஹீரோ

இயக்குனர் பாலா இயக்கத்தில் வரும் படங்களில் எல்லா காட்சிகளும் மிகவும் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொன்றையும் மெனக்கெட்டு எடுப்பார்.  அதற்காக நடிகர் நடிகைகளை அதட்டி, உருட்டி  இன்னும் அதற்கு கொஞ்சம் மேலே போய் இப்பொழுது கை நீட்டவும் செய்து இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருந்தது.

அதனாலேயே இவரது படங்களில் எந்த முன்னணி நடிகர்களும் நடிப்பதற்கு முன் வருவதில்லை. இதனைத் தொடர்ந்து இவர் இயக்கத்தில் வரும் வணங்கான் திரைப்படத்திற்கு ஹீரோ சரியாக கமிட் ஆக முடியாமல் இந்த படத்தை துவங்காமல் நிலுவையில் இருந்து வருகிறது. இதற்கெல்லாம் காரணமாக இருப்பது இவருடைய ஆணவம் தான்.

Also read: அக்கட தேசத்து ஹீரோவுடன் கூட்டணி போடும் வெற்றிமாறன்.. பாலாவை போல் சூர்யாவை கழட்டிவிட்ட சோகம்

இதே மாதிரி ஏற்கனவே இவரை நம்பி போன ஒரு முன்னணி நடிகரை கழுத்து அறுத்து விட்ட மாதிரி இவருடைய செயல்கள் இருந்திருக்கிறது. இவரால் இன்னும் அந்த ஹீரோ ஒரு நல்ல நிலைமைக்கு வர முடியாமல் தவித்து வருகிறார். அதாவது இவரை குருவாக நினைத்த விக்ரம், இவரது மகன் துருவ் விக்ரம் சினிமாவில் நடிகராக அறிமுகப்படுத்த வேண்டும் என்பதற்காக பாலாவிடம் உதவி கேட்டிருக்கிறார்.

அதற்காக பாலாவும் ஒரு ரீமேக் படத்தை துருவ் விக்ரமை வைத்து இயக்க ஆரம்பித்தார். இதற்கான படப்பிடிப்புகள் நடந்து கொண்டிருக்கும்போது விக்ரம் அதை பார்ப்பதற்கு கூட போகவே இல்லை ஏனென்றால் முழுசாக பாலாவை நம்பி ஒப்படைத்து விட்டார். அடுத்த கட்டமாக இதனுடைய பாதி காட்சிகள் தயாராகிய நிலையில் விக்ரம் தன் பையனுடைய நடிப்பை பார்ப்பதற்கு மிகவும் ஆவலாக இருப்பதால் ரொம்பவும் தயங்கி தயங்கி பாலாவிடம் நான் இந்த காட்சிகளை பார்க்கலாமா என்று கேட்டிருக்கிறார்.

Also read: பணத்தாசையால் மொத்தத்தையும் இழந்த காமெடி நடிகர்.. அமீர், பாலாவால் கிடைத்த வாழ்க்கையை பறிகொடுத்த சோகம்

அதற்கு பாலா வந்து பாருங்கள் என்று அசால்டாக கூறி இருக்கிறார். இதை பார்ப்பதற்காக வர்மா படத்தின் தயாரிப்பாளர், விக்ரம், மற்றும் துருவ் விக்ரம் ஆகியோர் வந்திருக்கிறார்கள். அந்த படத்தை பார்க்க பார்க்க தயாரிப்பாளர் கலங்கி போயிட்டாரு, துருவ் விக்ரம் பாதிலேயே எழுந்து போய்விட்டார். ஏனென்றால் இந்த படத்தை ரொம்ப கேவலமாகவும், துருவ் விக்ரமை பாடா படுத்தியும் எடுத்திருக்கிறார். அதில் தேவை இல்லாத முகத்தை சுளிக்க வைக்கும் ஏகப்பட்ட சீன்கள் இருப்பதால் விக்ரமிற்கு பேரதிர்ச்சியாக இருந்தது.

தன் மகனை எப்படி பார்க்க வேண்டும் என்று நினைத்த விக்ரமிற்கு என்ன சொல்வது என்று தெரியாமல் எழுந்து போய்விட்டார். இதற்காக பாலா, விக்ரமிடம் தன்னை அவமரியாதை செய்து விட்டதாக கோபத்தை காட்டி இருக்கிறார். இந்த படத்தின் தயாரிப்பாளர், விக்ரமிடம் இந்த படத்திற்கு இதுவரை எவ்வளவு செலவு ஆகியிருந்தாலும் பரவாயில்லை. இதற்கான படப்பிடிப்பை இத்துடன் நிறுத்தி கொள்கிறேன் என்று கூறிவிட்டார்.

Also read: சரக்கு சாம்ராஜ்யத்தின் மகாராஜா எங்க அப்பன்.. துருவ் விக்ரம் மிரட்டும் மகான் பட டிரைலர்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்