மூர்த்திக்கு ஷாக் கொடுத்த ஐஸ்வர்யா.. குத்தி விட்ட வேடிக்கை பார்க்கும் மீனா

விஜய் டிவியின் ப்ரைம் டைம் சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கூட்டுக் குடும்பத்தின் மகத்துவத்தை ரசிகர்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இந்த காலகட்டத்தில் இதெல்லாம் சாத்தியமா என சிலர் கூறினாலும், கூட்டுக்குடும்பத்தில் என்னென்ன லாப நஷ்டம் இருக்கிறது என்பதை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் எந்தவித எதிர்மறையான கருத்துக்களும் இல்லாமல் கண்டிக்கப்படுகிறது.

இந்த சீரியலில் கடைசி தம்பியான கண்ணன் படித்துக்கொண்டிருக்கும்போது ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு, சிலகாலம் வீட்டினால் ஒதுக்கப்பட்டு, தற்போது மீண்டும் வீட்டிற்குள் சேர்க்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டிலிருந்து தற்போது கல்லூரிக்கு சென்று வருகின்றனர்.

ஆனால் இதனை மீனா அவ்வப்போது நக்கலாக கிண்டலடிக்கிறார். ஏனென்றால் தனம், கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவருக்கும் கை செலவிற்கு தினமும் 100 ரூபாய் கொடுக்கிறார். அத்துடன் சாப்பாடு துணிமணி உள்ளிட்ட அனைத்தும் கல்யாணத்திற்கு பிறகும் சுலபமாக கண்ணன் ஐஸ்வர்யாராய்க்கு கிடைத்துவிடுகிறது என்று மீனா கடந்த சில நாட்களாக குத்தலாக அவர்கள் முன்பே பேசிக் கொண்டிருக்கிறார்.

எனவே திருமணமான போது கல்லூரிக்கு சென்று வந்த பின்பு பகுதி நேர வேலைக்கு சென்று கொண்டிருந்த ஐஸ்வர்யா மற்றும் கண்ணன் மீண்டும் அப்படி ஏதாவது ஒரு வேலையை செய்யலாம் என்று யோசிக்கின்றனர். இதற்காக  ஐஸ்வர்யா, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையில் எனக்கும் கண்ணனுக்கும் ஏதாவது ஒரு வேலை கிடைக்குமா?’ என்று மூர்த்தியிட கேட்கிறார்.

இதை கேட்டு ஷாக் ஆன மூர்த்தி, இரண்டு பேரும் படிக்கிற வேலையை பாருங்க அதன் பிறகு வேலைக்கு செல்லலாம் என்று சமாதானப்படுத்துகிறார். இப்பொழுது வேலைக்கு போக என்ன அவசியம் என்றும் ஐஸ்வர்யாவிடம் மூர்த்தி கேட்கிறார். அதற்கு ஐஸ்வர்யா ஏற்கனவே வேலைக்கு சென்றதால் எங்களுக்கு கல்லூரிக்கு சென்று வந்த பிறகு வேலைக்கு செல்வதில் எந்தவித கஷ்டமும் இல்லை என்று மறுபடியும் மூர்த்தியிடம் ஐஸ்வர்யா வேலை கேட்கிறார்.

ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் புதிதாக ஒரு டிபார்ட்மென்ட் ஸ்டோர் கட்டிக் கொண்டிருக்கின்றனர். எனவே ஐஸ்வர்யா மற்றும் கண்ணன் இருவரையும் அந்தக் கடையில் வேலை கொடுக்க மூர்த்தி முடிவெடுப்பார் என்று ரசிகர்கள் கணிக்கின்றனர்.

ஆனால் புதிதாக திறக்கும் கடையில் மீனா மற்றும் முல்லை இருவரையும் விட்டுவிட்டு தற்போது திடீரென்று வீட்டுக்குள் நுழைந்த ஐஸ்வர்யாவை கல்லாவில் அமர வைப்பது பாண்டியன் ஸ்டோர் வீட்டில் புது கலவரத்தை உருவாக்கும். ஆகையால் அதை தனம் எப்படி கையாள்வார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்