Tamil Cinema News | சினிமா செய்திகள்
சனம் ஷெட்டி வெளியே போனதற்கு அவர்தான் சந்தோஷப்படுவார்.. கேடுகெட்ட வேலை பார்த்த மீரா மிதுன்
தமிழ் சினிமாவைப் பொருத்தவரை பல்வேறு விதமான சாதனைகளை செய்து தன்னுடைய முழு திறமையால் தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகளை பெற்ற ஒரே ஒரு மாடல் நடிகை மீரா மிதுன் தான். அப்படின்னு அவரே சொல்லிக் கொண்டார்.
ஆனால் விசாரித்து பார்க்கையில் சாக்கடையை விட கேவலமாக இருக்கிறது அவரது கேரக்டர். ஆண் நண்பர்களுடன் போதைப் பழக்கம், தனிமையில் இருப்பது என பெயரை கெடுத்துக் கொண்டார். அதைத்தானே வீடியோ எடுத்து பிரபலமும் செய்து கொண்டார்.
இதனால் கடுப்பான ரசிகர்கள், இதெல்லாம் என்ன ஜென்மம் என்று கூறுவதை பலமுறை பார்த்திருக்கிறோம். இன்றும் சமூக வலைத்தளத்தில் மீராமிதுனை கண்டால் வெளுத்து வாங்கும் ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
தன்னை பெரிய ஆள் என நினைத்து சமீபத்தில் முன்னணி நடிகர்களின் மனைவிகளை அவதூறாக பேசி தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்டார். இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சனம் ஷெட்டி வெளியேறியதை குறிப்பிட்டு சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார்.
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அழகிப் போட்டியில் திருட்டுத்தனமாக சனம் ஷெட்டியை இரண்டாவது இடத்திற்கு தள்ளி பட்டம் பெற்றவர் மீரா மீதுன். பின்னர் மீராமிதுன் செய்த கேடுகெட்ட வேலை தெரிய வந்த பின் அந்த படத்தை புடிங்கி சனம் செட்டியிடம் கொடுத்து விட்டனர். அப்போது இருந்தே அவருக்கு சனம் ஷெட்டி மீது கடுப்பு தானாம்.

sanam-meera
இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சனம் ஷெட்டியை தாக்கும் வகையில், சனம் ஷெட்டி வீட்டை விட்டு வெளியேறியதற்கு முதன்முதலில் சந்தோஷப்படுபவர் அவரது முன்னாள் காதலர் தர்ஷன் தான் என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மீரா மிதுன் எந்த அளவுக்கு பிரபலம் ஆனார் என்பது அனைவருக்குமே தெரிந்ததுதான். இந்நிலையில் சனம் ஷெட்டியை கலாய்த்ததற்கு ரசிகர்கள் வண்டை வண்டையாக அவரது ட்விட்டர் பக்கத்தில் அர்ச்சனை செய்து வருகின்றனர்.
