பிரதீப்புக்கு மாயா கட்டம் கட்டியது இப்படித்தான்.. வசமாக கமலுடன் சிக்கிய ஆதாரம்

BB7 Tamil: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது எந்த சீசனிலும் இல்லாத விஷயமாக இந்த சீசனில் டாஸ்க் மூலமாக வீட்டில் இருக்கும் மூன்று போட்டியாளர்களை வெளியேற்றிவிட்டு, வெளியே போன மூன்று பேரை வைல்டு கார்டு என்ட்ரியாக கொண்டு வருவதற்கு இந்த வாரம் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த வைல்ட் கார்டில் பிரதீப் ஆண்டனி உள்ளே வரவேண்டும் என்பதுதான் பிக் பாஸ் ஆடியன்ஸ்களின் பெரிய ஆசையாக இருக்கிறது. கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி 52 நாட்களை கடந்த நிலையிலும், இன்று வரை பிரதீப் ஆண்டனிக்கு கொடுக்கப்பட்ட ரெட் கார்டை பற்றி தான் அதிக அளவில் பேசப்படுகிறது.

பிரதீப் ஆண்டனிக்கு நான் ரெட் கார்டு கொடுக்கவில்லை என கிட்ட தட்ட ஒரு எபிசோடு முழுக்க பேசி கமல் தன்னிலை விளக்கம் கொடுத்திருக்கிறார். நீங்கள் கேட்டதால்தான் நாங்கள் ரெட் கார்டை காட்டினோம் என ஒரு பக்கம் போட்டியாளர்கள் பின்வாங்கி விட்டார்கள். மொத்தத்தில் அவருக்கு ரெட் கார்டு கொடுத்தது மிகப்பெரிய தவறு, பொய் காரணங்கள் சொல்லப்பட்டதால் தான் ரெட் கார்டு கொடுத்தது யார் பொறுப்பு என யாரும் சொல்ல மறுக்கிறார்கள் என்றும் பேசப்பட்டு வருகிறது.

Also Read:பிக்பாஸ் விசித்ராவுக்கு அந்தரங்க டார்ச்சர் கொடுத்த ஹீரோ.. அட்ஜஸ்ட்மெண்ட்டுக்கு மறுத்ததால் விழுந்த அடி

இது போன்ற ஒரு சூழ்நிலையில் பிரதீப்புக்கு எதிராக மாயா பின்னிய வலை வெளிவந்து இருக்கிறது. அதாவது பிக் பாசின் மத்த சீசன்களில் மக்கள் ஒரு போட்டியாளரை ஆதரிப்பதற்கு கிட்டத்தட்ட ஒரு மாதமாவது ஆகும். ஆனால் பிரதீப் ஒரு வாரத்திலேயே மக்கள் மனதில் நிலைத்து விட்டார். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை எபிசோடுகளில் ஆடியன்ஸ்கள் அவருக்கு கை தட்டியதே அதற்கு சாட்சி.

ஆடியன்ஸ்களின் மனக்கணக்கை சரியாக புரிந்து கொண்ட மாயா முதலில் பிரதீப்பிடம் நன்றாக பேசுவது போல் காட்டிக்கொண்டார். கூல் சுரேஷ் சம்பந்தப்பட்ட விஷயம் வெளியான போது மாயா இதுதான் சரியான சமயம் என்பதை தீர்மானித்து, அவர் பேச்சைக் கேட்டு ஆடிய அத்தனை தலையாட்டி பொம்மைகளையும் பிரதீப்புக்கு எதிராக மாற்றிவிட்டார்.

அதனால்தான் மாயா கடந்த இரண்டு வாரங்களாக ரொம்பவே அடக்கி வாசிக்கிறார். வெளியே போனால் பிரதீப்பின் ரசிகர்களுக்கு என்ன பதில் சொல்வோம் என்று மாயா புலம்பிய வீடியோ தான் அவர் தீட்டிய சதி திட்டத்திற்கான ஆதாரம். எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும் கமல் மாயாவை கேள்வி கேட்காமல் இருப்பது அவருடைய சதியில் இவருக்கு உடந்தை இருப்பது போல் தான் காட்டுகிறது.

Also Read:பதுங்கி நின்னு பாயப் போகும் 3 சாத்தான்கள்.. ஜால்ரா அடிக்கும் தொடுப்புகள், சிக்கப் போவது விச்சுவா அச்சுவா?

 

 

 

 

 

 

 

 

 

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்