தாலி கட்டும் நேரத்தில் தடைப்பட்ட பார்வதியின் திருமணம்.. பில்லா அஜித் ரேஞ்சுக்கு பில்டப் காட்டிய வில்லன்

விஜய் டிவியின் ராஜா ராணி2 சீரியலில் சரவணனின் குடும்பம் பார்வதியின் திருமணத்தை இன்று சிறப்பாக நடத்த இருக்கின்றனர். ஆனால் இந்த திருமணத்தை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என அர்ச்சனா விக்கியை ஏவிவிட்டு சதித்திட்டம் தீட்டி கொண்டிருக்கிறாள்.

விக்கியும் பார்வதியை தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு, தொடர்ந்து மிரட்டுகிறான். ஒரு கட்டத்தில் குடும்ப மானத்தைக் காப்பாற்றுவதற்காக பார்வதி தற்கொலை செய்துகொள்ளவும் முடிவெடுக்கிறாள். ஆனால் சந்தியா கொடுத்த உந்துதலால் அந்த முடிவை கைவிட்டு விக்கியை நேருக்கு நேர் சமாளிக்க துணிகிறாள்.

உன்னால் என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ! என்று விக்கியிடம் பார்வதி சொல்லி விடுகிறாள். இதனால் ஆத்திரமடைந்த விக்கி முகூர்த்த நேரத்தில் பாஸ்கரன் பார்வதியின் கழுத்தில் தாலி கட்டும் சமயத்தில் வேற லெவலுக்கு என்ட்ரி கொடுத்து, அனைவரின் கவனத்தையும் பெறுகிறான்.

அதன்பிறகு பார்வதியும் விக்கியும் இருக்கும் புகைப்படத்தை மண்டபத்தில் இருப்பவர்கள் பார்ப்பதற்காகவே தூக்கி வீசுகிறான். இதை பார்த்ததும் பார்வதியின் மீது தவறான எண்ணம் வந்து, இந்தக் திருமணம் நின்று போகும் என விக்கி எண்ணுகிறான்.

ஆனால் அதற்கு எதிர்மாறாக சந்தியா இந்த விஷயத்தில் தலையிட்டு விக்கி எப்படிப்பட்டவன் என்பதை நெத்தி பொட்டில் அடித்தாற்போல் சொல்லி, அவனை மண்டபத்தில் இருந்து விரட்ட போகிறாள். கடைசியில் பாஸ்கரன்-பார்வதி திருமணம் இனிதே நடைபெற்ற போகிறது.

இருப்பினும் இவர்களது திருமணம் நடைபெறுவதற்கு உள்ளாகவே ஏகப்பட்ட திருப்பங்களை ஏற்படுத்தி, சீரியலில் இயக்குனர் கதையின் விறுவிறுப்பை கூட்ட முயற்சிக்கிறார். ஆனால் கடைசியில் சந்தியா விக்கியின் ஆட்டத்தை அடக்கி இந்த திருமணத்தை எப்படியாவது நடத்தி விடுவாள் என்பது தெரிந்த விஷயம் தானே.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்