அந்த ஒரு விஷயத்திற்கு மறுத்ததால் திருமணம் செய்து கொண்டேன்.. கலகலப்பாக பேசிய மணிரத்தினம்

தமிழ் மற்றும் ஹிந்தி சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் மணிரத்னம். காதலை மையப்படுத்தி அவர் எடுத்த திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

பகல் நிலவு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு இயக்குநராக அறிமுகமானவர் மணிரத்னம். ஆனால் அந்த படம் தோல்வியை தழுவியது. அதைத்தொடர்ந்து அவர் இயக்கிய இதயக்கோவில் என்ற திரைப்படமும் ரசிகர்களை கவர தவறியது.

இதனால் எப்படியாவது ஒரு வெற்றி திரைப்படத்தை கொடுத்தே ஆக வேண்டும் என்று அவர் மோகன், கார்த்திக் ,ரேவதி ஆகியோரை வைத்து மௌன ராகம் என்ற திரைப்படத்தை இயக்கினார். அந்த ஒரு திரைப்படம் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.

அதைத்தொடர்ந்து அவர் இயக்கிய நாயகன், அஞ்சலி, கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற திரைப்படங்கள் அனைத்தும் பல விருதுகளை தட்டிச் சென்றது. தற்போது அவர் பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று திரைப்படத்தை மிகவும் பிரம்மாண்டமாக எடுத்து வருகிறார்.

இயக்குனர் மணிரத்னம், நடிகை சுஹாசினியை 1988 ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நந்தன் என்ற ஒரு மகனும் இருக்கிறார். இவர்களுடைய காதல் திருமணத்தை பற்றி நடிகை சுகாசினி பல இடங்களில் கூறியிருக்கிறார்.

ஆனால் இயக்குனர் மணிரத்னம் அதைப்பற்றி யாரிடமும் பேசியதில்லை. தற்போது அவர் தன்னுடைய திருமணத்தை பற்றி ஒரு விழாவின் போது மிகவும் சுவாரசியமாக கூறியுள்ளார். அதாவது இயக்குனர் மணிரத்னம் தன்னுடைய பகல் நிலவு என்ற திரைப்படத்திற்கு நாயகியாக நடிக்க நடிகை சுஹாசினியை அணுகியுள்ளார்.

ஆனால் சுஹாசினி அந்த படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளார். இதை பற்றி கூறிய மணிரத்னம் என்னுடைய முதல் படத்திற்கு நான் சுஹாசினியை நடிக்க கேட்டேன் ஆனால் அவர் மறுத்துவிட்டார். அதனால் நான் அவரை திருமணம் செய்து கொண்டேன் என்று வேடிக்கையாகக் கூறினார்.

அவருடைய இந்த கலகலப்பான பேச்சு அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது. மேலும் இரண்டு வரிகளில் தன்னுடைய காதலையும், திருமணத்தையும் அவர் கூறியிருப்பது பலரையும் பாராட்ட வைத்துள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்