Tamil Cinema News | சினிமா செய்திகள்
மாதவனுடன் இணையப்போகும் சூர்யா மற்றும் ஷாருக்கான்… ரசிகர்கள் கொண்டாட்டம்!
Published on

மாதவன் நடித்து வரும் ‘ராக்கெட்ரி’ நம்பி விளைவு படம் மூன்று மொழிகளில் படமாக்கப்படுகிறது. இப்படத்திற்காக மாதவன் தனது முழுத் தோற்றத்தை மாற்றிக் கொண்டுள்ளார்.
இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறு முழு படமாக எடுத்துக் கொண்டிருக்கின்றனர். இதில் தமிழில் சிறப்பு தோற்றத்தில் சூர்யாவும் ஹிந்தியில் ஷாருக்கானும் நடிக்க உள்ளனர்.
மாதவனின் நெருங்கிய நண்பர்கள் என்பதால் அவர் கேட்ட உடனே ஒப்புக் கொண்டுள்ளனர். இவரே இப்படத்தை இயக்குவதால் பல போராட்டங்கள் இருக்கும் என்று கூறியுள்ளார்.
இப்படம் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக இவர் தமிழில் நடித்த ‘விக்ரம் வேதா’ என்ற படம் உலக அளவில் வெற்றி நடைபோட்டது.
