இத போய் ஷேர் செய்யலாமா? கோபத்தில் கொந்தளித்த மாதவன் மனைவி

சாக்லேட் பாய் என்று செல்லமாக அழைக்கப்படும் மாதவன் தன்னுடைய கவர்ச்சிகரமான புன்னகையால் பல பெண் ரசிகர்களை கவர்ந்துள்ளார். மாதவன் சின்னத்திரை மூலம் தனது திரைப் பயணத்தை தொடங்கி விளம்பரங்களில் நடித்து பின்னர் வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்தது.

மணிரத்தினம் இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு வெளியான அலைபாயுதே படம் மாதவனுக்கு ரசிகர்கள் அதிகமாக வர காரணமாக அமைந்தது. அதன் பிறகு கௌதம் மேனன் இயக்கிய மின்னலே படத்தில் மாதவனின் நடிப்பால் பெண்களின் மனதை இன்னும் வசீகரித்தார்.

சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு நடிகர் காதல் மன்னனாக தோன்றி இளம் பெண்களின் கனவு நாயகனாக வலம் வருவது உண்டு. அந்தவகையில் ஜெமினி கணேசன், கமல் ஹாசன், அஜித், அரவிந்த் சாமி ஆகியோர் பெண்களின் கனவு நாயகனாக வந்தவர்கள்.

இவர்களைத் தொடர்ந்து மாதவன் தன்னுடைய 50 வயதைக் கடந்தும் பெண்கள் மனதில் கனவு நாயகனாக வாழ்ந்து வருகிறார். இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆண்களை விட பெண் ரசிகர்களே அதிகம். மாதவன்
சின்னதாக எதாவது ஒரு போட்டோ அப்டேட் செய்தால் ரசிகர்கள் அதைக் கொண்டாடி வருவார்கள்.

இந்நிலையில் கொஞ்ச நாட்களுக்கு முன் மாதவன் சட்டையில்லாமல் போட்டோ எடுத்த அவருடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அந்த போட்டோ பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இன்றும் மாதவனை பெண் ரசிகர்கள் கொண்டாடி வருவது அவர் மனைவிக்கு பிடிக்கவில்லையோ என்னவோ இந்தப் போட்டோவை பார்த்துவிட்டு வயசுக்கு ஏத்த மாதிரி நடந்துக்கோங்க என மாதவனை கண்டித்துள்ளாராம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்