நடிப்பில் என்னுள் பாதிதான் எம்எஸ் பாஸ்கர் என புகழ்ந்து தள்ளிய கமலஹாசன்.. இந்த மனுஷனுக்குள்ள இவ்வளவு திறமையா!

திருமதி ஒரு வெகுமதி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான எம்எஸ் பாஸ்கர். அதன் பிறகு சினிமாவில் தனது திறமையின் மூலம் பல வெற்றிகளை கண்டுள்ளார்.

90 கிட்ஸ் காலத்தில் ஒளிபரப்பான சின்ன பாப்பா பெரிய பாப்பா என்னும் சீரியலில் பட்டாபிராமன் எனும் கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமடைந்தார் எம்எஸ் பாஸ்கர். அதிலும் குறிப்பாக 100 ரூபாய் இருந்தா கொடுங்க டீ குடிச்சிட்டு வரேன் என சொல்லும் வசனங்கள் எல்லாம் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது.

இந்த சீரியலில் பட்டாபிராமன் நடிப்பை பார்த்து கலைஞர் பாராட்டியுள்ளார். லிங்கா படத்தில் பிரம்மானந்தவிற்கு டப்பிங் குரல் எம்எஸ் பாஸ்கர் தான் கொடுத்துள்ளார். நடிப்பு மற்றும் டப்பிங் ஆர்டிஸ்டாக பணியாற்றிய எம்எஸ் பாஸ்கர் அதன்பிறகு வில்லனாக செல்வி எனும் சீரியலில் நடித்துள்ளார்.

kamal-ms-baskar
kamal-ms-baskar

மொழி படத்தில் இவரது நடிப்பைப் பார்த்து 2007ஆம் ஆண்டு பெஸ்ட் கேரக்டருக்கான விருது கலைஞரிடம் வாங்கியுள்ளார். அது மட்டுமில்லாமல் பிரெஞ்சு மொழியை அசால்ட்டாக பேசக்கூடியவர். இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் படத்திற்காக எம்எஸ் பாஸ்கர் ஒரு புதிய மொழியை உருவாக்கி நடித்துள்ளார். இதுபோன்று பல திறமைகளை கொண்டவர்.

எம்எஸ் பாஸ்கர் மகாநதி படத்தைப் பார்த்து கதறி கதறி அழுதுள்ளார். அந்த அளவிற்கு கமல்ஹாசனின் தீவிரமான ரசிகர். ஒரு முறை கமல்ஹாசன் அனைவர் முன்னிலையிலும் என்னுள் பாதி தான் எம்எஸ் பாஸ்கர் என கூறியுள்ளார்.

அதைக் கேட்டு அனைவர் முன்னிலையிலும் கண் கலங்கி அழுதுள்ளார். தற்போது வரை பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களிடம் தொடர்ந்து பாராட்டை பெற்று வருகிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்