காதல் திருமணம் செய்து பிரிந்த 10 ஜோடிகள்.. அடியாத மாடு படியாதுனு தெரியல

சினிமாவைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார்கள். பின்பு அவர்களுக்குள் ஏற்படும் மனக்கசப்பால் சில வருடங்கள் மட்டுமே ஒன்றாக வாழ்ந்து பின்பு விவாகரத்து பெற்று பிரிந்து விடுகிறார்கள். அந்த வகையில் சினிமா துறையில் காதலித்து திருமணம் செய்து கொண்டு பிரிந்த ஜோடிகளை பார்க்கலாம்.

பார்த்திபன், சீதா : தமிழ் சினிமாவில் புதிய பாதை என்ற படத்தின் மூலம் அறிமுகமான பார்த்திபன், சீதா இருவரும் பெற்றோரை மீறி காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 பெண் குழந்தை உள்ள நிலையில் இவர்களுக்குள் உள்ள மன கசப்பால் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

பிரதாப் போத்தன், ராதிகா : பிரபல இயக்குனரும், நடிகருமான பிரதாப் போத்தன் அவர்களை ராதிகா காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பின்னர் ஒரே ஆண்டில் இவர்கள் இருவருக்கும் விவாகரத்து ஆனது. அதன்பிறகு ராதிகா, ரிச்சட் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட அவரிடமிருந்து விவாகரத்துப் பெற்றார். அதன் பிறகு நடிகர் சரத்குமாரை ராதிகா திருமணம் செய்து கொண்டார்.

ராமராஜன், நளினி : கரகாட்டக்காரன் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் ராமராஜன். இவர் நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அருணா, அருண் என்ற இரட்டை குழந்தை பிறந்தது. சில காரணங்களால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்கின்றனர்.

பிரகாஷ் ராஜ், லலிதாகுமாரி : தமிழ் சினிமாவில் வில்லன், குணச்சித்திர நடிகர் என பல பரிமாணங்களில் ரசிகர்களை மகிழ்வித்த வருபவர் பிரகாஷ்ராஜ். நடிகை லலிதா குமாரியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ள நிலையில் பரஸ்பரமாக விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்தனர்.

ரகுவரன், ரோகினி : தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்தின் மூலம் பரிச்சயமானவர் நடிகர் ரகுவரன். இவர் நடிகை ரோகிணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. திருமணமாகி எட்டு வருடங்களுக்குப் பிறகு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

சுரேஷ் மேனன், ரேவதி : இயக்குனரும், நடிகருமான சுரேஷ் மேனன் நடிகை ரேவதியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணமாகி இருபத்தி ஏழு வருடங்களுக்குப் பிறகு விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன்பிறகு, ரேவதி டெஸ்ட் டியூப் மூலம் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

செல்வராகவன், சோனியா அகர்வால் : இயக்குனர் செல்வராகவன் தன் படத்தின் நடிகையான சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்பு சோனியா அகர்வால் குடிக்கு அடிமையானதால் செல்வராகவன் சோனியாவை பிரிந்தார். பின்பு அவருடன் உதவி இயக்குனராக பணியாற்றிய கீதா அஞ்சலி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

ஏ எல் விஜய், அமலா பால் : ஏ எல் விஜய் இயக்கிய தெய்வத்திருமகள் படத்தில் அமலாபால் நடித்து இருந்தார். இப்படத்தில் ஏற்பட்ட நட்பின் மூலம் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு திருமணமான ஒரு வீட்டிற்குள்ளே இவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பால் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

நாக சைத்தன்யா, சமந்தா : நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவரும் காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திருமணமான 4 ஆண்டுகளிலேயே ஒரு சில காரணங்களால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.

தனுஷ், ஐஸ்வர்யா : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள தனுஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளார்கள். இந்நிலையில் 18 வருட திருமண வாழ்க்கையில் இருந்து விவாகரத்து பெற இருவரும் முடிவு செய்துள்ளனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்