பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளிய வந்ததும் சம்யுக்தா செஞ்ச வேலைய பாருங்க.. அலப்பறை தாங்கலடா சாமி!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் இருந்து நேற்று சம்யுக்தா வெளியேற்றப்பட்டார்.

மேலும் நேற்று வீட்டை விட்டு வெளியேறும் போது கமலஹாசனிடம் பேசிய சம்யுக்தா, ‘ஆஜித், ஷிவானி, சோம் சேகர், ரம்யா, பாலாஜி, அர்ச்சனா ஆகியோரை கண்டிப்பாக மிஸ் பண்ணுவேன்’ என்று கூறினார்.

அதுமட்டுமல்லாமல் ‘வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு அவர்களுடன் நல்ல நட்புறவை தொடர்வேன்’ என்றும் குறிப்பிட்டார் சம்யுக்தா.

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் சம்யுக்தா முதலாவதாக செய்த செயல்கள் புகைப்படங்களாக இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது.

அதாவது பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சம்யுக்தாவை அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியோடு வரவேற்ற புகைப்படங்களும், கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களும் இணையத்தில் தாறுமாறாக வைரலாகி வருகிறது.

samyuktha
samyuktha

மேலும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சம்யுக்தா, கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவரது மகனை சந்தித்துள்ள சந்தோஷமான தருணங்களை இணையத்தில் பதிவிட்டிருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

samyuktha
samyuktha