2ஆம் பாகத்திற்கு ரெடியாகிய லோகேஷ்.. 2022ல் வெளியாகிறது புதிய அப்டேட்

தமிழில் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் கவனிக்கபட்டவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து லோகேஷ், நடிகர் கார்த்தியை வைத்து கைதி என்ற படத்தை இயக்கினார். இந்த திரைப்படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று அவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்று தந்தது. மேலும் நடிகர் கார்த்தி க்கு இப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வந்தார். தற்போது இவர் உலக நாயகன் கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட போட்டோக்கள் யாவும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. தற்போது படு வேகமாக நடந்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய இருக்கிறது.

இந்த படத்தை அடுத்து லோகேஷ் கைதி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருக்கிறார். முதல் பாகத்தைப் போலவே இதிலும் நடிகர் கார்த்தி ஹீரோவாக நடிக்கிறார். கார்த்தி தற்போது முத்தையா இயக்கத்தில் விருமன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அந்த திரைப்படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் முடிய உள்ள இந்த படத்தை அடுத்து கார்த்தி கைதி 2 படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விக்ரம் படத்தை வேகமாக முடித்து விட்டு கைதி 2 படத்தை ஆரம்பிக்க உள்ளார்.

இந்த திரைப்படத்தை குறித்த முக்கியமான அறிவிப்பு ஒன்று வரும் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. கைதி திரைப்படத்தைப் போலவே அதன் இரண்டாம் பாகமும் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்