500 படங்கள் நடித்தும் கண்டுகொள்ளாத திரையுலகம்.. உயிர் பிரிவதற்கு முன் குள்ளமணியை சந்தித்த ஒரே பிரபலம்

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறக்கும் பல நடிகர் நடிகைகள் சினிமாவில் பெரிய அளவு ஊதியம் மற்றும் வாய்ப்புகள் கிடைக்காமல், தங்களது கடைசி காலத்தில் பல சிரமங்களுக்கு ஆளாகி கேட்பாரற்று இறந்து வருகின்றனர்.

அந்தவகையில் 80-களில் ரஜினி, கமல் படங்களில் துணை நடிகராக நடித்துள்ள நடிகர் குள்ளமணி என்பவர், கடந்த 2013ஆம் ஆண்டு கிட்னி பாதிப்பினால் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதன்பின்பு சில நாட்களிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அப்போது நடிகர் சரத்குமார் மட்டுமே அவரை நேரில் வந்து பார்த்த ஒரே நடிகர். அதுமட்டுமில்லாமல் அவர் இறந்த பின்பு கூட சினிமா பிரபலங்கள் எட்டிக்கூட பார்க்கவில்லை.

sarathkumar-cinemapettai-01
sarathkumar-cinemapettai-01

பொதுவாக சினிமாவில் வெறும் ஐந்து படங்களில் நடித்தாலே கோடியில் புரளுவார்கள். ஆனால் 500 படங்களில் நடித்தும், நமது அன்றாட வாழ்விற்கு சிரமப்பட்ட குள்ளமணிக்கு, அவர் நடித்த படங்களில் பல படங்களுக்கு சம்பளமே தரவில்லை என்று அவருடன் இருந்தவர்களால் சொல்லப்படுகிறது.

மேலும் குள்ளமணிக்கு ராணி என்ற மனைவியும், மகாலட்சுமி என்ற மகளும் இருக்கின்றனர். குள்ள மணியின் வாழ்க்கையை வைத்துப் பார்க்கும் பொழுது, உச்ச நட்சத்திரமாக இருந்தால் மட்டுமே சினிமா பிரபலங்களால் தங்களது வாழ்க்கையை ஓட்ட முடியும்.

ஏனென்றால் பெரும்பாலான துணை நடிகர் நடிகைகளின் நிலைமை சிரமமாகவே அமைந்துவிடுகிறது. இவர்களுக்கு நிஜ வாழ்க்கையிலும் மரியாதை கிடைப்பதில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்