கடைசி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்.. பிக்பாஸில் இந்த வாரம் வெளியேற போகும் நபர்

சமீபகாலமாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்து வருகிறது. புது போட்டியாளர்கள் வீட்டிற்குள் வந்துள்ளது ஆட்டத்தை இன்னும் சூடு பிடிக்கத் செய்துள்ளது.

எதிர்பாராததை எதிர் பாருங்கள் என்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் அடிக்கடி கூறுவார். அந்த வகையில் இந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத ஒரு சம்பவம் பிக்பாஸில் நடந்துள்ளது. அதாவது ஒவ்வொரு வாரமும் பிக்பாஸ் வீட்டில் நாமினேட் செய்யப்படும் போட்டியாளர்களுக்கு ரசிகர்கள் தங்கள் வாக்குகளை அளிப்பார்கள்.

சில நேரங்களில் ரசிகர்கள் விரும்பும் போட்டியாளர்கள் குறைவான வாக்குகளை பெற்று வெளியேறுவார்கள். சில நேரங்களில் ரசிகர்கள் யாரை வெளியே அனுப்ப வேண்டும் என்று நினைக்கிறார்களோ அவர்கள் வெளியேறுவார்கள். கடந்த சீசன்களிலும் இதுபோல் நிறைய முறை நடந்துள்ளது.

அந்த வரிசையில் இந்த வாரமும் ரசிகர்கள் தாங்கள் விரும்பும் போட்டியாளர்களுக்கு தங்கள் வாக்குகளை அளித்து வந்தனர். அதில் எப்போதும் போல தொகுப்பாளினி பிரியங்கா அதிக ஓட்டுக்களை பெற்றுள்ளார். அவரைத் தொடர்ந்து இமான் அண்ணாச்சி, ஐக்கி, பவானி ரெட்டி ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

கடைசி இரண்டு இடத்தில் தாமரைச்செல்வி மற்றும் நிரூப் இருவரும் இருந்து வருகின்றனர். இதில் நிரூப் நேற்று வரை கடைசி இடத்தில் இருந்தார். ஆனால் இன்றைக்கு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. இன்று நிரூப் 81,041 வாக்குகளை பெற்றுள்ளார். தாமரைச்செல்வி 80,767 ஓட்டுகளை பெற்று கடைசி இடத்தில் உள்ளார். தாமரைச்செல்வி நிரூப்பை விட 274 ஓட்டுக்கள் குறைவாக பெற்றுள்ளார்.

இதனால் ஆட்டம் இன்று தலைகீழாக மாறியுள்ளது. நேற்று வரை இந்த வாரம் நிரூப் தான் வெளியே செல்வார் என்று இருந்த நிலையில் இன்று தாமரை கடைசி இடத்தை பிடித்துள்ளார். தாமரை அதிகப்படியான வார்த்தைகளை விடுவது தான் அவரின் வாக்குகள் குறைந்ததற்கு காரணமாக இருக்கும். சில நாட்களாக பிக்பாஸ் வீட்டில் இசைவாணி மற்றும் தாமரை இருவருக்கும் வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது.

அதனால் எரிச்சலடைந்த ரசிகர்கள் கடந்த வாரம் இசை வாணியை வெளியேற்றினார்கள். அதற்கடுத்து இந்த வாரம் தாமரை வெளியேறுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்