நயன்தாரா விஷயத்தில் குஞ்சுமோன் சொன்ன பெரிய பொய்.. ஹீரோவாவது உண்மையா

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக இருந்தவர் கே டி குஞ்சுமோன். அந்த காலத்தில் பெரிய திரைப்படங்களை இயக்க வேண்டும் என்றால் எல்லா இயக்குனர்களும் இவரைத்தான் அணுகுவார்கள். ஜென்டில்மேன், காதலன் உள்ளிட்ட பல திரைப்படங்களை இவர் தயாரித்துள்ளார்.

இந்த திரைப் படங்களின் வெற்றியை தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களை தயாரித்த இவர் கடைசியாக தமிழில் விஜய்யை வைத்து என்றென்றும் காதல் என்ற திரைப்படத்தை தயாரித்து இருந்தார். அதன் பிறகு அவர் இதுவரை எந்த படத்தையும் தயாரிக்கவில்லை.

சமீபகாலமாக சினிமாவை விட்டு காணாமல் போயிருந்த இவர் மீண்டும் ஒரு புதிய படத்தை தயாரிக்கப் போகிறேன் என்று வெளிச்சத்திற்கு வந்துள்ளார். அர்ஜுன், மதுபாலா நடிப்பில் ஷங்கர் இயக்கிய ஜென்டில்மேன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை தான் இவர் தற்போது தயாரிக்க இருக்கிறார்.

தமிழ் திரையுலகில் பிரம்மாண்ட இயக்குனர் என்று நாம் கொண்டாடி வரும் ஷங்கரின் முதல் திரைப்படம் இது. அதுமட்டுமல்லாமல் அர்ஜுனுக்கும் இந்தப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. தற்போது இந்த இரண்டாம் பாகத்தில் நடிகை நயன்தாரா ஹீரோயினாக நடிக்க உள்ளதாக குஞ்சுமோன் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இதனால் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருந்த நிலையில் அது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கிடையாது வேற ஒரு புது ஹீரோயின் என்று தெரியவந்துள்ளது. நயன்தாரா சக்கரவர்த்தி என்ற அவர் பெயரை வெறும் நயன்தாரா என்று போட்டு குஞ்சுமோன் பீதியை கிளப்பி உள்ளார்.

இப்பொழுது இந்த படத்தின் இரண்டாம் பாகம் வருவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. ஹீரோயின் தான் புதுசு ஆனால் ஹீரோ அதே அர்ஜுன் தான் என்று கூறுகின்றனர். இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. இது பற்றிய விளக்கத்தை குஞ்சுமோன் தான் அளிக்க வேண்டும். இதுவாவது உண்மையாக இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்