500 படங்கள் நடித்தும் அனாதையாக இறந்த போன குள்ளமணி.. மறைவிற்கு சென்ற ஒரே ஒரு பிரபலம்

தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் அறிமுகமாகி உள்ளனர். அதில் ஒரு சிலர் மட்டுமே வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். மற்றவர்கள் அனைவரும் திறமை இருந்தும் பெரிய அளவில் சாதிக்க முடியாமல் போய் உள்ளனர்.

அப்படி திறமை இருந்தும் சினிமாவில் சாதிக்க முடியாமல் போனவர்தான் காமெடி நடிகர் குள்ளமணி. இவர் கரகாட்டக்காரன் படத்தில் அண்ணே நான் வியாபாரி என்னும் கூறும் வசனம் எல்லாம் அவ்வளவு எளிதில் யாராலும் மறந்து விட முடியாது. அந்த அளவிற்கு இந்த வசனம் பிரபலமானது.

இவர் எம்ஜிஆர் காலத்தில் இருந்தே சினிமாவில் நடித்து வருகிறார். கிட்டத்தட்ட 500 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இதில் பல படங்களில் இவருக்கு சரியான சம்பளம் வழங்கப்படவில்லை என கூறியுள்ளனர். இவர் நடித்த படங்களில் சரியான சம்பளம் கொடுத்திருந்தால் இன்று அவர் கோடிக்கணக்கில் சம்பாதித்து இருப்பார் என பல ரசிகர்களும் கூறிவருகின்றனர்.

kullamani family
kullamani family

வெறும் 2, 3 படங்களில் மட்டும் நடித்த நடிகர்களே கோடிக்கணக்கில் சொத்து வைத்திருக்கும் போது இவ்வளவு படங்கள் நடித்த இவர் எப்படி சம்பாதிக்காமல் போனார் என பலரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.

கடந்த 2013ஆம் ஆண்டு கிட்னி பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார். ஆனால் இவரது மறைவிற்கு எந்த பிரபலமும் நேரில் செல்லவில்லை. சரத்குமார் மட்டும் நேரில் சென்று அவரை பார்த்து அவரது மனைவிக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்