ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த கேஜிஎஃப் படக்குழுவினர்.. என்ன விஷயம் தெரியுமா?

கடந்த 2018 ஆம் ஆண்டு இந்திய திரை உலகமே திரும்பி பார்க்கும் அளவிற்கு மாபெரும் வெற்றி பெற்ற படம்தான் கேஜிஎஃப். இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் கன்னட சினிமாவில் வெளியான படம்தான் கேஜிஎப். ஆனால் இப்படம் தமிழ், ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

இதுவரை வேறு எந்த ஒரு படத்திற்கும் இல்லாத வரவேற்பு இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்தது. இப்படத்தின் மாபெரும் வெற்றியை கண்ட இயக்குனர் இதன் இரண்டாம் பாகத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் முற்றிலுமாக முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது.

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியாக உள்ளது. தமிழ் உட்பட தென்னிந்திய மொழிகளில் இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜீ தமிழ் நிறுவனம் பெற்றுள்ளது.

kgf 2
kgf 2

கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் நிலையில், இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

முன்னதாக இப்படம் ஜூலை 17ம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்தனர். ஆனால் கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக இப்படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது. தற்போது 7 மாதங்கள் இப்படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. மேலும் இப்படத்தின் வருகைக்காக காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்