அண்ணாத்த படத்திற்காக கீர்த்தி சுரேஷ் செய்த மிகப்பெரிய தவறு.. இப்ப புலம்பி என்ன பிரயோஜனம்

திரையுலகில் இருக்கும் ஒவ்வொரு நடிகர் மற்றும் நடிகைகளுக்கும் தங்களது வாழ்நாளில் ஒரு படமாவது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்து விட வேண்டும் என்ற ஆசை இருக்கும். அவருடன் நடிக்க ஒரு வாய்ப்பு கிடைக்காதா என பல நடிகர்கள் ஏங்கி வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் அவருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் யாராவது அதை தவறவிடுவார்களா என்ன?

அப்படி தனக்கு கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்தி கொண்டவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். ஆனால் இவர் அண்ணாத்த பட வாய்ப்பிற்காக மற்றொரு பிரம்மாண்ட பட வாய்ப்பை நிராகரித்து உள்ளார். அதுதான் தற்போது அவர் செய்த மிகப்பெரிய தவறாக அனைவராலும் கருதப்படுகிறது.

இயக்குனர் சிவா இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்களின் கூட்டணியில் கடந்த தீபாவளி அன்று வெளியான படம் தான் அண்ணாத்த. வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் விமர்சன ரீதியாக படம் அந்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை என்று தான் கூற வேண்டும்.

அண்ணன் தங்கை பாசத்தை மையமாக கொண்டு உருவான இப்படத்தில் ரஜினியின் பாசமிகு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். முன்னதாக இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகி இருந்தார்.

ஆனால் பொன்னியின் செல்வன் மற்றும் அண்ணாத்த ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்பும் ஒரே சமயத்தில் நடைபெற்றதால் கீர்த்தி சுரேஷால் பொன்னியின் செல்வன் படத்திற்கு நேரம் ஒதுக்க முடியவில்லையாம். எனவே பொன்னியின் செல்வன் படத்தின் வாய்ப்பை நிராகரித்து விட்டு அண்ணாத்த படத்தில் மட்டும் கவனம் செலுத்தி உள்ளார்.

சூப்பர் ஸ்டாருடன் நடிக்க வேண்டும் என்ற ஆசையால் கீர்த்தி சுரேஷ் பொன்னியின் செல்வன் வாய்ப்பை நிராகரித்துள்ளார். அது அவரது விருப்பம். இந்நிலையில் ஒரு தங்கச்சி கேரக்டருக்காக இரண்டு பாகங்களில் பிரம்மாண்டமாக உருவான பட வாய்ப்பை தவறவிட்டு மிகப்பெரிய தப்பு பண்ணிட்டீங்களே என கீர்த்தியின் ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்