கீர்த்தி சுரேஷை ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்ட நபர்.. கொந்தளித்த தந்தை

சினிமாவில் நடிக்கும் நடிகைகளை ஆபாசமாக வர்ணிப்பதற்காகவே ஒரு கூட்டம் உள்ளது. அவர்கள் நடிகைகள் பிரபலங்கள் என்பதை தாண்டி அவர்களும் ஒரு பெண் என்று யாரும் உணர்வதே இல்லை. நடிகை தானே என அவர்களை விமர்சித்து வருகிறார்கள். முன்னணி நடிகை முதல் அனைவருமே இதை சந்தித்து உள்ளார்கள்.

தற்போது ஒரு இளம் நடிகைக்கும் இந்த பிரச்சனை நடந்துள்ளது. அவர் வேறு யாருமல்ல தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் தான். இது என்ன மாயம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் அடுத்தடுத்து தனது நடிப்பு மூலம் டாப் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்க தொடங்கினார்.

திரையுலகில் நுழைந்த மிக குறுகிய காலத்திலேயே மகாநதி படத்தில் தனது அபார நடிப்பு திறமையை வெளிப்படுத்தியதன் மூலம் தேசிய விருதை தட்டி சென்றார். இளம் வயதில் தேசிய விருதை வென்று சிறந்த நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியான மரைக்காயர் அரபிக்கடலின்டே சிங்கம் படத்தில் நடித்துள்ளார்.

ஆனால் எதிர்பாராத விதமாக இந்த படம் வெற்றி பெறவில்லை. பிரம்மாண்டமாக உருவான இப்படத்தை ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால் படத்திற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. மேலும் படத்தை சோசியல் மீடியாக்களில் மிகவும் மோசமாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் தான் அந்த படத்தில் நடித்திருக்கும் கீர்த்தி சுரேஷ் பற்றி மிகவும் தகாத வார்த்தைகளில் ஆபாசமாக பேசி இளைஞர் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ விவகாரம் மலையாள நடிகர்கள் சங்கத்தின் தலைவராக இருக்கும் மோகன்லால் கவனத்திற்கு வந்துள்ளது.

இதனை அடுத்து அவர் கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ் குமாரிடம் கூற அவர் இதுகுறித்து திருவனந்தபுரம் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்