பரியேறும் பெருமாள் கயல் ஆனந்தி ஞாபகம் இருக்கா.. இப்போதானே கல்யாணம் ஆச்சு, அதுக்குள்ள இப்படியா.?

பிரபு சாலமன் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான படம் “கயல்”. இதில் சந்திரன், ஆனந்தி ஆகியோர் நாயகன், நாயகியாக நடித்திருந்தனர். ஆனந்தி இப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானதால் ‘கயல்’ ஆனந்தி என அழைக்கப்பட்டார்.

ஆந்திராவை பூர்விகமாகக்கொண்ட இவர் தமிழில் நாயகியாக அறிமுகமாவதற்கு முன்னதாகவே தெலுங்கில் பல படங்களில் நாயகியாக நடித்திருந்தார். தனது குழந்தைத்தனமான முகபாவனை மற்றும் நடிப்பால் ரசிகர் மனதில் நிலையான ஒரு இடத்தைப் பெற்றார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் ‘ஜோதி மஹாலக்ஷ்மி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரிடமும் பாராட்டைப்பெற்றார். இந்நிலையில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் சாக்ரடீஸ் என்ற துணை இயக்குனரை திருமணம் செய்துகொண்டார்.

இவர் ‘மூடர்கூடம்’ படத்தின் இயக்குனர் நவீனுக்கு நெருங்கிய உறவினராவார். தற்போது ஆனந்தி 7 மாத கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கல்யாணம் ஆகி 8 மாசம் தாங்க ஆகுது.. பரவால்ல..வாழ்த்துக்கள் என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

kayal-anandhi
kayal-anandhi

கயல் ஆனந்தி கைவசம் மூன்று தமிழ் படம் மற்றும் ஒரு தெலுங்குப்படம் உள்ளன.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்