எச்சை இலை எடுக்கும் மருமகன்.. ஆத்திரத்தில் சாபம் விட்ட மாமியார்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தற்போது பல அதிரடி திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது கதிர் வேலைபார்க்கும் ஹோட்டலுக்கு எதர்ச்சியாக வந்த முல்லையின் அப்பா, அம்மா இருவரும் கதிரை பார்த்து விடுகிறார்கள்.

அதன்பின்பு முல்லையின் அம்மா பார்வதி கோபமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டுக்குச் செல்கிறார். அங்கு மூர்த்தி, மீனா, ஐஸ்வர்யா, கண்ணன் ஆகியோர் உள்ளனர். அப்போது பார்வதி தனது மருமகன் எச்ச இலை எடுப்பதைப் பார்த்த ஆத்திரத்தில் மூர்த்தியை பல கேள்விகள் கேட்கிறார்.

அதாவது சிறுவயது முதலே கதிரின் உழைப்பை சுரண்டிக் கொண்டு இப்போது நல்ல நிலைமைக்கு வந்த பிறகு அவரை விரட்டி விட்டுட்டீங்க என வாய்க்கு வந்த வற்றை பார்வதி கேட்கிறார். இவர் சொன்ன பிறகுதான் மூர்த்திக்கு கதிர் ஹோட்டலில் வேலை பார்க்கும் விஷயமே தெரிய வருகிறது. இதனால் மூர்த்தியும் மிகுந்த கவலையில் உள்ளார்.

மேலும் பார்வதி நீங்க எல்லாம் நல்லாவே இருக்க மாட்டீங்க என சாபம் விடுகிறார். இதற்கு மேல எங்களுக்கு சாபம் விடாதீர்கள் என மீனா கேட்கிறார். அதன் பின்பு நான் நியாயத்தை கேட்க மட்டும்தான் வந்தேன் என்று கூறிவிட்டு பார்வதி செல்கிறார். மறுபக்கம் முல்லையின் அப்பா முல்லை வீட்டுக்கு சென்று கதிர் ஹோட்டலில் தான் வேலை பார்க்கிறார் என்ற உண்மையை சொல்கிறார்.

இதனால் கதிர் அடுத்ததாக என்ன செய்யப்போகிறார் என்ற பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. மேலும் மீனாவின் அப்பா பாண்டியன் ஸ்டோர்ஸ் கடைக்கு சென்று ஜீவாவிடம் தனியாளாக என்னால் எல்லா வேலையும் பார்த்துக் கொள்ள முடியவில்லை என கூறுகிறார். நீங்கள் வந்து கடையை பார்த்துக் கொள்ளுங்கள் என வற்புறுத்துகிறார்.

ஆனால் ஜீவா, ஏற்கனவே தனம் அண்ணி மட்டும் கடையை பார்த்துக்கறாங்க. நானும் வந்துட்டா ரொம்ப கஷ்டமாகி விடும் என கூறுகிறார். ஆனால் எப்படியாவது ஜீவாவை தன் கடையோடு வைத்துக்கொள்ள வேண்டும் என மீனாவின் அப்பா திட்டம் போட்டு வருகிறார். இதனால் ஜீவாவும் இந்த கடையை விட்டு போனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகும்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்