மீண்டும் பாண்டியன் ஸ்டோருக்கு வந்த கதிர்-முல்லை.. பாதை மாறிப் போகும் ஜீவா

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மனைவியின் மருத்துவ செலவிற்காக வாங்கிய 5 லட்சத்தை திருப்பி தரும் கட்டாயத்தில் வீட்டைவிட்டு வெளியேறிய கதிர்-முல்லை இருவரும் தற்போது புதிதாக ஹோட்டல் ஒன்றை துவங்கியுள்ளனர்.

இதற்காக மளிகை பொருள் வாங்குவதற்காக தன்னுடைய அண்ணன் கடையான பாண்டியன் ஸ்டோருக்கு வந்த கதிர், அண்ணி தனம் மூட்டை தூங்குவதை பார்க்கமுடியாமல், அந்த மூட்டைகளை கதிரே தூக்கிப் போடுகிறார்.

அதன்பிறகு கடைக்குள் வேண்டிய பொருட்களை வாங்கும் கதிரிடம், அண்ணி தனம் புதிதாக தொடங்கியிருக்கும் ஹோட்டல் தொழிலில் நீ சிறப்பாக வருவாய். இருப்பினும் செய்து கொடுத்த சத்தியத்தை நிறைவேற்றி மீண்டும் எங்களுடன் சேர்ந்து ஒரே வீட்டில் இருக்க விரும்புகிறேன் என கண் கலங்குகிறார்.

உடனே கதிரும் சீக்கிரம் ஐந்து லட்சத்தை கொடுத்துவிட்டு குடும்பத்துடன் சேர்ந்து விடுவேன் என அண்ணி தனதிற்கு ஆறுதல் அளிக்கிறார். மறுபக்கம் ஜீவா உடல்நிலை குறைவு ஏற்பட்டது போல் சீன் காண்பிக்கும் மாமனாரின் மளிகை கடை கணக்கு வழக்குகளை பார்த்துக்கொள்ளும் பொறுப்பை கையில் எடுக்கிறார்.

இப்படி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவா, பெண் பிள்ளைகளை மட்டுமே வைத்திருக்கும் மாமனாரின் பொறுப்புகளை கையில் எடுத்துக்கொண்டு பாதை மாறி செல்கிறார். மேலும் இளைய தம்பியான கண்ணன், வீட்டைவிட்டு வெளியேறிய கதிர்-முல்லை இருவரையும் அவ்வபோது சந்தித்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளையும் செய்து வருகிறார்.

இப்படிக் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தவர்கள் தற்போது பிரிந்து செல்லும் நிலை ஏற்பட்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமே சோகத்தில் இருக்கிறது, இருப்பினும் கதிர்-முல்லை இருவரும் ஹோட்டல் தொழிலில் சிறப்பாக வரவேண்டும் என அனைவரும் விரும்புகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்